வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

உலகம்

3 மாதத்தில் 5000 பேர்.. அர்ஜெண்டினாவுக்கு படையெடுக்கும் ரஷ்ய கர்ப்பிணிகள்!

3 மாதத்தில் 5000 பேர்.. அர்ஜெண்டினாவுக்கு படையெடுக்கும் ரஷ்ய கர்ப்பிணிகள்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
  3 மாதத்தில் 5000 பேர்.. அர்ஜெண்டினாவுக்கு படையெடுக்கும் ரஷ்ய கர்ப்பிணிகள்.. காரணம் இதுதான்!* கடந்த 3 மாதங்களில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய கர்ப்பிணிகள் அர்ஜெண்டினா வந்துள்ளனர். ஒரு நாட்டின் குடியுரிமை பெறுவதற்கு அந்தந்த நாடுகளின் சட்டப்படி பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதே போல் அர்ஜெண்டினாவில் கடைபபிடிக்கப்படும் நடைமுறைகளில் ஒன்று அந்நாட்டில் யாராவது குழந்தை பெற்றுக்கொண்டால் அந்தக் குழந்தைக்கும், குழந்தையின் பெற்றோர்களுக்கும் அந்நாட்டு அரசு குடியுரிமை வழங்கி விடுகிறது. இதை யார் பயன்படுத்திக் கொள்கிறார்களோ இல்லையோ, ரஷ்யாவைச் சேர்ந்த கர்ப்பிணிகள் மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆயிரக்கணக்கான ரஷ்ய கர்ப்பிணிப் பெண்கள் அர்ஜெண்டினாவில் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் என விசா பெற்றுக்கொண்டு அங்கு செல்லும் நிறைமாத கர்ப...
இலங்கை உள்நாட்டுப் போரை நோக்கித் தள்ளப்படும் ஆபத்து…முன்னிலை சோசலிசக் கட்சி எச்சரிக்கை!

இலங்கை உள்நாட்டுப் போரை நோக்கித் தள்ளப்படும் ஆபத்து…முன்னிலை சோசலிசக் கட்சி எச்சரிக்கை!

HOME SLIDER, politics, World News, உலக செய்திகள், உலகம்
அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் செயற்பாடுகள் காரணமாக இலங்கை உள்நாட்டுப் போரை நோக்கித் தள்ளப்படும் ஆபத்து இருப்பதாக முன்னிலை சோசலிசக்கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார். ஜூலை 15 ஆம் தேதி தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்க, கொழும்பு வாலுக்காரம விகாரையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.குறைந்தது இரண்டு நாட்களுக்காகவது அதிபர் பதவிக்கு வர வேண்டும் என்ற சிறுப்பிள்ளை தனமான எதிர்ப்பார்ப்புடன் அவர் அதிபர் பதவியை கட்டிப்பிடித்துக்கொண்டார். கோத்தபய ராஜபக்சே பதவி விலகி ரணிலை அந்த இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரவில்லை.1988,1989 ஆம் ஆண்டுகளில் பட்டலந்தை சித்திரவதை முகாமில் கொலை செய்த காலம் என நினைத்துக்கொண்டிருக்கின்றார். இல்லை, இது 2022 ஆம் ஆண்டில் இருக்கும் இலங்கை.இந்த காலத்தில் விளையாட முடியாது.அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் இணக...
பூமி சுற்று வட்ட பாதையில் சுற்றிய செயற்கைகோள் நிலவை நோக்கி பயணம்- நாசா சாதனை!

பூமி சுற்று வட்ட பாதையில் சுற்றிய செயற்கைகோள் நிலவை நோக்கி பயணம்- நாசா சாதனை!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், உலகம், செய்திகள்
அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, ராக்கெட் லேட் மற்றும் அட்வான்ஸ்ட் ஸ்பேஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணந்து கேப்ஸ்டோன் செயற்கைகோளை ஏவியது. நியூசிலாந்தின் மகியா தீபகற்பத்தில் சிறிய எலெக்டிரான் ராக்கெட்டில் 25 கிலோ எடை கொண்ட செயற்கைகோள் கடந்த 6 நாட்களுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்று வட்ட பாதையை அடைந்த செயற்கைகோள் அதிலிருந்து விலகி வெற்றிகரமாக நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது. இந்த செயற்கைகோள் நிலவை அடைய 4 மாதங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராக்கெட் லேப் நிறுவனர் பீட்டர் பெக் கூறும்போது, மீதமுள்ள பணிகள் வெற்றிகரமாக இருந்தால் கேப்ஸ்டோன் செயற்கைகோள், நிலவை சுற்றி ஒரு புதிய சுற்றுப் பாதையில் முதன் முதலில் செல்லும். பல தகவல்களை பல மாதங்களுக்கு அனுப்பும் என்றார். இந்த செயற்கைேகாள் குறைந்த செலவில் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேட்வ...
உக்ரைனுக்கு இணையதள கருவிகளை அனுப்பிய எலான் மஸ்க்!

உக்ரைனுக்கு இணையதள கருவிகளை அனுப்பிய எலான் மஸ்க்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், உலகம், செய்திகள்
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 100 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு உதவும் வகையில் நிதி மற்றும் ஆயுத உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. இதேபோல் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டிற்கு தனது ஸ்டார்லிங்க் நிறுவனம் மூலம் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவைகளை வழங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது உக்ரைன் ராணுவம் பயன்படுத்தும் வகையில் அவர் மேலும் சில ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணையதள கருவிகளை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் உக்ரைனுக்கு சுமார் 15000 இணையதள கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 10000 கருவிகள் அனுப்பப்பட்டது. இத்துடன் சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் பெறும் டெஸ்லா கருவிகளையும் உக்ரைன் ராணுவத்தின் பயன்பாட்டிற்காக அனுப்பியுள்ளோம் என கூறியுள்ளார்....
நான் இளையராஜாவின் வெறித்தனமான ரசிகன் – மாமனிதன் ஆடியோ விழாவில் விஜய்சேதுபதி பேச்சு

நான் இளையராஜாவின் வெறித்தனமான ரசிகன் – மாமனிதன் ஆடியோ விழாவில் விஜய்சேதுபதி பேச்சு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, உக்ரைன் போர், உலக செய்திகள், உலகம்
  சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில், ஸ்டூடியோ 9 சார்பில் ஆர் கே சுரேஷ் வெளியிடவுள்ள 'மாமனிதன்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், பத்திரிகை, தொலைக்காட்சி ஊடக நண்பர்கள் மற்றும் திரையுலக ஆளுமைகள் முன்னிலையில் புதுச்சேரியில் நேற்று நடைபெற்றது. விழாவில் பேசிய விஜய் சேதுபதி, "யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜாவுடன் ஒரே படத்தில் பணியாற்றும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்திருக்காது. நான் இளையராஜாவின் தீவிர ரசிகன், அவருடைய இசையில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. இயக்குநர் சீனு ராமசாமி மனிதாபிமானத்தை மையப்படுத்தி படம் எடுக்க கூடியவர். இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்," என்றார். உங்களின் அன்...
4 பெட்ரூம், 8 மனைவிகள் – அட்டவணை போட்டு படுக்கையை பகிரும் தாய்லாந்து ஹீரோ.!

4 பெட்ரூம், 8 மனைவிகள் – அட்டவணை போட்டு படுக்கையை பகிரும் தாய்லாந்து ஹீரோ.!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
  ஒன்ன வைச்சி ஒழுங்கா வாழுறதுக்கே வழியில்ல... ஒருத்தன் 8 பேரோட ஒரே வீட்டுல சந்தோஷமா வாழ்ந்தா... கேக்கவே செமய்யா இருக்கில்ல... தாய்லாந்தில் வசிக்கும் டாட்டூ கலைஞர் ஒருவர் தனது எட்டு மனைவிகளுடன் மகிழ்ச்சியாக வாழும் செய்தி உலகம் முழுக்க உள்ள பெருசுகள் முதல் சிறுசுகள் வரையில் வயிறு எரிய வைத்துள்ளது... யார்ரா அவன் ? எட்டு பேரா ? எப்படி ? எப்படி ?எனக்கே அவன பார்க்கனும் போல இருக்கு என ஆர்வத்துடன் கேட்க்கின்றனர். தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஓங் டாம் சொரோட், தான் எப்படி எட்டு மனைவியரை திருமணம் செய்து அனைவருடனும் ஒரே வீட்டீல் மகிழ்ச்சியாக வாழ்கிறேன் என்பதை பற்றி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேட்டியளித்தார், அந்நிகழ்ச்சி யூடியூப்பில் மட்டும் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. நிகழ்ச்சியில் சோரோட் தனது ஒவ்வொரு மனைவியையும் அறிமுகப்படுத்தி அவர்கள் எப்படி அவரை  சந்தித்தார...
ரயிலில் இருந்து வடகொரியா ஏவுகணை சோதனை!!

ரயிலில் இருந்து வடகொரியா ஏவுகணை சோதனை!!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
  ரயிலில் இருந்து இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட புதிய தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரயிலில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்ததாக வட என்று கொரியாவின் அரசாங்க செய்தி நிறுவனமான VOK தெரிவித்துள்ளது. இந்த மாதம் வட கொரியா இரண்டு ஏவுகணைகளை கடலில் சோதனை செய்ததை கண்டறிந்ததாக தென் கொரியாவின் இராணுவம் கூறியதைத் தொடர்ந்து, இந்த அறிக்கை வந்தது.   பியோங்யாங்கின் வெளியுறவு அமைச்சகம் வட கொரியாவின் முந்தைய சோதனைகள் மீது புதிய தடைகளை விதித்ததற்காக அமெரிக்காவை கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது அதனைத் தொடர்ந்து, அமெரிக்கா அதன் நிலைப்பாட்டை தொடர்ந்தால் வலுவான மற்றும் வெளிப்படையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கும் வகையில் இந்த ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொண்டுள்ளது ...
உலகிலேயே முதல் காகிதமற்ற அரசாக மாறியது துபாய்

உலகிலேயே முதல் காகிதமற்ற அரசாக மாறியது துபாய்

HOME SLIDER, உலக செய்திகள், உலகம்
உலகிலேயே முதல் காகிதமற்ற அரசாக மாறியது துபாய் உலகிலேயே 100 சதவீதம் காகிதம் இல்லாத அரசாங்கமாக துபாய் மாறியுள்ளதாக எமிரேட்ஸ் பட்டத்து இளவரசர் அறிவித்துள்ளார். துபாயில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் காகிதமில்லா டிஜிட்டல் நகரமாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை 5 கட்டங்களாக பிரித்து பட்டியலிடப்பட்டன. இதன் 5ஆவது கட்டத்தின் முடிவில், துபாயில் 45 அரசு துறைகளும் காகிதமற்றவையாக மாற்றப்பட்டன. இதன்மூலம், உலகின் முதல் காகிதமில்லா அரசு என்ற பெருமையை துபாய் பெற்றுள்ளது. இந்த துறைகள் 1,800 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் சேவைகள் மற்றும் 10,500 க்கும் மேற்பட்ட முக்கிய பரிவர்த்தனைகளை வழங்குகின்றன. இதுகுறித்து, எமிரேட்ஸ் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- இந்த சாதனை புதுமை, படைப்பாற்றல் மற்றும் எதிர்காலத்தில் கவனம் செலுத்தும் பயணம். இத...
இந்தியாவின் 12 கடலோர நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம் – நாசா எச்சரிக்கை!

இந்தியாவின் 12 கடலோர நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம் – நாசா எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, உலகம், செய்திகள்
இந்தியாவின் 12 கடலோர நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம் - நாசா எச்சரிக்கை! காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை உயர்ந்து வருவதால், கடல் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. உலகளாவிய சராசரி கடல் மட்டம் ஆண்டுக்கு சுமார் 3.7 மில்லிமீட்டர் என்ற விகிதத்தில் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கு இடையிலான குழு (IPCC) அறிக்கையின் அடிப்படையில் கடல் நீர் மட்டம் உயர்வது குறித்த தரவுகளை, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டு உள்ளது. அதில், 2100-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் கடலோரப் பகுதியில் உள்ள 12 கடலோர நகரங்கள் சராசரியாக 3 மீட்டர் அளவு நீருக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மனித நடவடிக்கைகள் சூற்றுச்சூழலில் ஏற்படுத்தியுள்ள மோசமான பாதிப்பே இவற்றிற்கு காரணம் என தெரி...
மெக்சிகோவில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெக்சிகோவில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
மெக்சிகோவில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! மெக்சிகோ நாட்டின் பவிஸ்பே நகருக்கு மேற்கு-தென்மேற்கில் இருந்து 26 கி.மீ. தொலைவில் நேற்றிரவு 9.19 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.2 ஆக பதிவாகி உள்ளது.  இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....