’கார்மேனி செல்வம்’ திரைப்பட விமர்சனம் 3.5
கார் ஓட்டுநராக வேலை செய்யும் சமுத்திரக்கனி, அளவான குடும்பம், வருமானத்திற்கு ஏற்ற வாழ்க்கை, என்று மகிழ்ச்சியாக இருந்தாலும், சொந்த வீடு மற்றும் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற தனது ஆசையை நிறைவேற்றும் முயற்சியில் கடனாளியாகி விடுகிறார். அவசரத்திற்கு கடன் வாங்க தொடங்கும் சமுத்திரக்கனி, அதையே தனது ஆசையை நிறைவேற்றுவதற்கான வழியாக மாற்றிக் கொள்ளும் போது, அவரை பெரும் சிக்கல் சூழ்ந்து கொள்கிறது. அதில் இருந்து அவர் மீண்டாரா? இல்லையா? என்பதை, பல்வேறு ஆசைகளை வளர்த்துக்கொண்டு அதன் மூலம் அவதிப்படும் நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலாக சொல்வதே ‘கார்மேனி செல்வம்’.
இருப்பதை வைத்து நிறைவாக வாழாமல், நிறைவை தேடி...தேடி... வாழ்க்கையை தொலைத்து விடக்கூடாது, என்ற மெசஜை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் ராம் சக்ரி, ஒரு சராசரி குடும்பத்தின் கனவுகள் மற்றும் அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை...









