கார் ஓட்டுநராக வேலை செய்யும் சமுத்திரக்கனி, அளவான குடும்பம், வருமானத்திற்கு ஏற்ற வாழ்க்கை, என்று மகிழ்ச்சியாக இருந்தாலும், சொந்த வீடு மற்றும் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற தனது ஆசையை நிறைவேற்றும் முயற்சியில் கடனாளியாகி விடுகிறார். அவசரத்திற்கு கடன் வாங்க தொடங்கும் சமுத்திரக்கனி, அதையே தனது ஆசையை நிறைவேற்றுவதற்கான வழியாக மாற்றிக் கொள்ளும் போது, அவரை பெரும் சிக்கல் சூழ்ந்து கொள்கிறது. அதில் இருந்து அவர் மீண்டாரா? இல்லையா? என்பதை, பல்வேறு ஆசைகளை வளர்த்துக்கொண்டு அதன் மூலம் அவதிப்படும் நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலாக சொல்வதே ‘கார்மேனி செல்வம்’.
இருப்பதை வைத்து நிறைவாக வாழாமல், நிறைவை தேடி...தேடி... வாழ்க்கையை தொலைத்து விடக்கூடாது, என்ற மெசஜை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் ராம் சக்ரி, ஒரு சராசரி குடும்பத்தின் கனவுகள் மற்றும் அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை...
தமிழ் ஈழப் போராட்டம் மற்றும் போர்க் காலங்களில் மக்கள் எதிர்கொண்ட இன்னல்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள ‘நீளிரா’ ஒரு நீண்ட இரவில் நடக்கும் கதை என்றாலும், ஈழப் போரின் பின்னணி, அம்மக்கள் எதிர்கொண்ட அவலங்கள் மற்றும் சமாதானம் என்ற பெயரில் அம்மண்ணில் அடியெடுத்து வைத்த இந்திய அமைதிப்படையின் அத்துமீறல்களை உணர்வுப்பூர்வமாக சொல்கிறது.
விடிந்தால் திருமணம், சுற்றி பதற்றமான சூழல், எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற ஒருவித பயத்தோடு இருந்தாலும், திருமண வீட்டார் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். இதற்கிடையே போராளிகளை தேடி இந்திய ராணுவம் அங்கு வருகிறது. மறுபுறம் அவர்கள் இருப்பதை அறிந்த போராளிகள் அவர்களை தாக்க தயாராகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்க இந்திய ராணுவப்படை திருமண வீட்டுக்குள் நுழைகின்றது.
ஒரு பக்கம் போராளிகள், மறுபக்கம் இந்திய ராணுவப்படை என போ...
ஸ்கை பிக்சர்ஸ் “ஃபைவ் ஸ்டார்” கே. செந்தில் மற்றும் டாக்டர். என். யோகேஸ்வரன் தயாரிப்பில் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத் ,அஜய் கார்த்தி , சங்கீதா,பவானி ஸ்ரீ, அபர்ணதி ,அனந்த் நாக் ,பிரகாஷ் ராஜ் ,கிஷோர் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’காளிதாஸ் 2’
சென்னை புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இதே அடுக்குமாடி குடியிருப்பில் அபர்ணதி – அனந்த் நாக், தம்பதிகள் 4 வயது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
மறுநாள் புதுவருடம் பிறப்பதால் அந்த குடியிருப்பில் ஆட்டம், பாட்டு என்று மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதே சமயம் அபர்ணாதியின் 4 வயது பெண் குழந்தை காணாமல் போகிறது. இதனையடுத்து குழந்தையை கண்டுபிடிப்பதற்காக காவல்துறை அதிகாரிகள் பரத் மற்றும் பவானி ஸ்ரீ அங்கு வருகிறார்கள்.
அதே குடியிருப்ப...
*நடிகர் டொவினோ தாமஸ் நடிக்கும் 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிகையாளர் சந்திப்பு*
வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் தமிழ் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இப்படத்தில் டொவினோ தாமஸ், கயாடு லோஹர், விஜயராகவன், பாபு ராஜ், அலெக்சாண்டர் பிரசாந்த், சுதீர் கராமனா, டி.ஜி.ரவி,, ஜான் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசைமமைத்திருக்கிறார். 1957ஆம் ஆண்டின் பின்னணியில் கமர்சியல் என்டர்டெய்ன...
*கலகலப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமான “TN 2026” வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!*
KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026”. இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
அரசியல் பகடி கலந்து, சமூக அக்கறை மிக்க கருத்துக்களுடன் அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டரில், நட்டி நடுநாயகமாக மேடையின் மீது கையை உயர்த்தி நிற்க, அருகில் முக்கிய கதாப்பாத்திரங்கள் கோஷமிட, சுற்றிலும் பெரும் கூட்டம் கொடிகள் மற்றும் பகடியான வசன பதாகைகளுடன் சூழ்ந்து நிற்கிறது. பார்த்தவுடன் ஈர்...
'ராவடி' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் S. S. லலித் குமார் தயாரிப்பில், நடிகர்கள் பஸில் ஜோசப் & L. K. அக்ஷய் குமார் நடிக்கும் ‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.
சென்னை மற்றும் ஒகேனக்கலில் படப்பிடிப்பு நடந்து முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.
நடிகர்கள் பஸில் ஜோசப் - L. K. அக்ஷய் குமார் ஆகியோர் இணைந்து நடிக்கும் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் ‘ராவடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும் ஒகேனக்கல் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன. இயற்கை அழகுடன் கூடிய ஒகேனக்கல் லொக்கேஷன், படத்திற்கு வித்தியாசமான காட்சியமைப்பை வழங்கும் என எதிர்பார...