தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது. இத் தேர்தலில் ஜி.கே.எம்.தமிழ்குமரன் தலைமையிலான தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணி அறிமுக கூட்டம் 22-12-2025 அன்று ஹோட்டல் ராதா பார்க் இன்னில் மாலை 6.00 மணியளவில் தொடங்கி நடைப்பெற்றது. இக் கூட்டதிற்கு சிறப்பு விருந்தினர்களாக கலைபுலி எஸ்.தாணு, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, பேராசிரியர்ஏ.எஸ்.பிரகாசம், வி.சி.குகநாதன், இசையமைப்பாளர் தீனா, இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் சரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணி சார்பில் போட்டியிடும் தலைவர் உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர...
ஃப்ரேம் & ஃபேம் (FRAME & FAME) – திரைப்பட விருது விழா - பத்திரிகையாளர் சந்திப்பு!
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகரான திரு. சித்ரா லட்சுமணன் அவர்களால் தொடங்கப்பட்ட ஒரு யூடியூப் சேனல் டூரிங் டாக்கீஸ். தமிழ் திரைப்பட வரலாற்றை டிஜிட்டல் ஆவணமாகப் பாதுகாப்பது, அதே நேரத்தில் வதந்தி மற்றும் சர்ச்சைகளைத் தவிர்த்து, சினிமாவைப் பற்றிய ஆழமான, அர்த்தமுள்ள மற்றும் ஆய்வுத் தன்மையுடைய உரையாடல்களை வழங்குவது இந்த சேனலின் பிரதான நோக்கமாகும். இந்த சேனலில் பல தசாப்தங்களாக தமிழ் திரைப்படத் துறையில் நேரடியாகச் செயல்பட்ட அனுபவத்தின் மூலம், திரு. சித்ரா லட்சுமணன் அவர்கள் உண்மைத்தன்மை கொண்ட தகவல்களையும் ஆழமான பார்வைகளையும் பகிர்ந்து வருகிறார். மற்ற எங்கும் பதிவு செய்யப்படாத பல அரிய நினைவுகள், அனுப...
ஜனவரி 9 முதல் 12 தேதி வரை தேசிய ஆரோக்கியா கண்காட்சி & ஆயுஷ் மாநாடு!
இந்திய அரசின் AYUSH அமைச்சகம் (Ministry of AYUSH, Government of India) மற்றும் Heartfulness Institute இணைந்து, NASYA, VIBA & Dr. SHREEVARMA’s Wellness ஆகிய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நடத்தப்படவுள்ள NATIONAL AROGYA EXPO & AYUSH CONCLAVE 2026 எனும் தேசிய அளவிலான ஆரோக்கிய மாநாட்டின் முன்னோட்ட நிகழ்வு சென்னை, T. Nagar-ல் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வு, வரவிருக்கும் தேசிய மாநாட்டின் நோக்கம், தத்துவம் மற்றும் சமூகப் பார்வையை மருத்துவ உலகம் மற்றும் சமூகத்திற்குப் பரிச்சயப்படுத்தும் ஒரு முக்கியமான கட்டமாக அமைந்தது. இதில் AYUSH துறையைச் சேர்ந்த மூத்த மருத்துவர்கள், ஒருங்கிணைந்த மருத்துவத்தில் ஈடுபடும் நிபுணர்கள், Core Committee Members மற்றும் பல்வேறு மருத்துவ அமைப்...