ஞாயிற்றுக்கிழமை, மே 12
Shadow

செய்திகள்

புதுமையான கதை சொல்லும் செயலியும் ஆடியோ OTTயுமான ரேடியோ ரூம்

புதுமையான கதை சொல்லும் செயலியும் ஆடியோ OTTயுமான ரேடியோ ரூம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  ஊடகத்துறை ஜாம்பவான்கள் உருவாக்கியுள்ள புதுமையான கதை சொல்லும் செயலியும் ஆடியோ OTTயுமான ரேடியோ ரூம் பொருத்தமான குரல்கள், பிரத்யேக இசை மற்றும் சிறப்பு சப்தங்கள் உடன் சிலிர்க்க வைக்கும் கேட்கும் அனுபவத்தை ரேடியோ ரூம் வழங்கும் ரீஜனல் ஸ்டோரி டெல்லர்ஸ் (Regional Story Tellers) குழுமத்தின் தலைவர் AL. வெங்கடாசலம் எனும் வெங்கிக்கு ஊடக வட்டாரங்களில் அறிமுகம் தேவையில்லை. விஜய் தொலைக்காட்சி மற்றும் புது யுகம் தொலைக்காட்சிகளில் தலைவராக இருந்த இவர், சுயாதீன தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் தரமான பல நிகழ்ச்சிகளை உருவாக்கியவர் ஆவார். வெங்கியின் பரந்த அனுபவத்தினாலும் சீரிய திறமையினாலும் ரேடியோ ரூம் என்ற புதிய முன்முயற்சி உருவாக்கப்பட்டுள்ளது. ரீஜனல் ஸ்டோரி டெல்லர்ஸ் குழுமத்தின் புதுமையான கதை சொல்லும் செயலியும் ஆடியோ OTTயுமான ரேடியோ ரூம் செயலி சென்னையில் பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்தப்ப...
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் – இயக்குனர் வெற்றி மாறன் இணைந்து புதிய ஒப்பந்தம்!

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் – இயக்குனர் வெற்றி மாறன் இணைந்து புதிய ஒப்பந்தம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  *வேல்ஸ் பல்கலைக்கழகமும் பன்னாட்டுத் திரைப் பண்பாட்டு மையமும் இணைந்து வழங்கும் இலவச திரைப்படக் கல்வி!* வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பன்னாட்டு திரை பண்பாட்டு மையம் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவசமாக மூன்றாண்டுத் திரைப்படக் கல்வியை வழங்குகிறது. சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்கும் பன்னாட்டுத் திரைப் பண்பாட்டு மையத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி B.Sc Film Studies (3 Years), M.Sc. Film and culture studies (2 years), PG Diploma in Media skills (1 year) ஆகிய பாடப்பிரிவுகளின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக ஏட்டுக்கல்வியுடன் செயல்முறைக்கல்வியும் சிறந்த முறையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தரும் திரைப்பட தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி கே.கணேஷ், பன்னாட்டு திரை பண்பாட்...
“மாற்றம்” சமூக நலப்பணிகள் அமைப்பு மூலம் டிராக்ட்டர்கள் வழங்கிய லாரன்ஸ்!

“மாற்றம்” சமூக நலப்பணிகள் அமைப்பு மூலம் டிராக்ட்டர்கள் வழங்கிய லாரன்ஸ்!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  சேவையே கடவுள் அறக்கட்டளை சார்பில் “மாற்றம்” சமூக நலப்பணிகள் துவக்கம் !! தமிழின் முன்னணி நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ், தன் உதவும் குணத்தால் மக்கள் மத்தியில் பிரபலாமானவர். இதுவரையில் பல மக்களுக்கு தனித்த முறையில் உதவிகள் செய்து வந்தவர், சேவையே கடவுள் எனும் பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவக்கியுள்ளார் இந்த அறக்கட்டளை சார்பில் மாற்றத்தை தரும் மாற்றம் செய்ல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளது . இந்த அறக்கட்டளையில் முன்னணி நடிகர் எஸ் ஜே சூர்யா அவர்களும் இணைந்து செயல்படவுள்ளார். இவர்களுடன் கலக்கப்போவது பாலா, செஃப் வினோத் , அறந்தாங்கி நிஷா அவர்கள் இணைந்து செயல்படவுள்ளனர். சேவையே கடவுள் எனும் அறக்கட்டளை அமைப்பின் பெயரில் மாற்றம் செயல்பாடுகள் இன்று முதல் ஆரம்பமானது. இந்த அறக்கட்டளை மூலம், தமிழக மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் தன்னார்வலர்கள் மூலம் செய்து தரப்படவுள்ளது. இன்று...
அரசு பள்ளிக்கு நடிகர் லாரன்சுடன் இணைந்து கழிப்பறை கட்டித்தந்த KPY பாலா

அரசு பள்ளிக்கு நடிகர் லாரன்சுடன் இணைந்து கழிப்பறை கட்டித்தந்த KPY பாலா

CINI NEWS, HOME SLIDER, செய்திகள், நடிகர்கள்
    *ராகவா லாரன்ஸ் மாஸ்டர் மற்றும் KPY பாலா இணைந்து பள்ளி மாணவர்களுக்கு கழிப்பறை வசதி அமைத்து தந்துள்ளனர்* !! மக்கள் பணிகளில் தொடர்ந்து ஈடுப்பட்டு வரும் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் மற்றும் KPY பாலா இருவரும் இணைந்து திருவண்ணாமலை மாவட்ட இரும்பேடு அரசினர் மேனிலைப்பள்ளி மாணவர்களுக்காக, 15 லட்சம் செலவில் கழிப்பறை வசதி அமைக்க உதவியுள்ளனர். மக்கள் பணிகளிலும் சமுதாயப் பணிகளிலும் பல உதவிகளை, பல காலமாக தொடர்ந்து செய்து வருபவர் ராகவா லாரன்ஸ் மாஸ்டர். அதே போல சமீபமாக பல சமூகப் பணிகளை ஆற்றி வருகிறார் சின்னத்திரைப் புகழ் நடிகர் பாலா. இருவரும் இணைந்து தற்போது பள்ளி மாணவர்களுக்காக, உதவிப்பணிகளை செய்துள்ளது பெரும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. KPY பாலா தான் செய்து வரும் தொடர் உதவிகளால் மக்களிடம் பெரும் பாராட்டுக்களை பெற்று வருகிறார். பொது மக்களிடமிருந்து அவருக்கு பல கோரிக்கைகளும் குவி...
ஸ்டாலின் ஒரு பொம்மை முதல்வர் – சொல்வது அதிமுக எடப்பாடி பழனிச்சாமி!

ஸ்டாலின் ஒரு பொம்மை முதல்வர் – சொல்வது அதிமுக எடப்பாடி பழனிச்சாமி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், முதல்வர் ஸ்டாலின்
  திருச்சி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியது, அதிமுக, திமுக, பாஜக தலைமையில் மூன்று பிரதான கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன. ஆனால் தேர்தலில் போட்டி என்று வருகின்ற போது அதிமுகவுக்கும், திமுகவுக்கும்தான் என்பதை இந்த நாடு அறியும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, பிரதமரை விமர்சிப்பார், அதை பற்றி கவலை இல்லை; இன்னொன்று என்னை பற்றி விமர்சிப்பார். சரக்கு இருந்தால்தானே பேச முடியும், அவர் பொம்மை முதலமைச்சர். எம்ஜிஆர், அம்மா வழியில் 4 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை நாம் கொடுத்தோம். ஆனால் மூன்றாண்டு திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக உள்ளது. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், 6 சட்டக்கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளை கொண்டு வந்தது அதிமுக அரசாங்கம். மூன்றாண்டு காலத்தில் ஒரு மருத்துவக் கல்லூரியை கொண்டு வர முடியவில்லை. உதயநிதி ஸ்டாலின் மூன்று வருஷமாக ஒரே செங்கலை காட்டிக் கொண்...
பா.ஜ.க.வில் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் சொல்கிறேன்… உங்களுடைய ஆணவம்தான் பா.ஜ.க.வை வீழ்த்தப் போகிறது- முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்

பா.ஜ.க.வில் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் சொல்கிறேன்… உங்களுடைய ஆணவம்தான் பா.ஜ.க.வை வீழ்த்தப் போகிறது- முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், முதல்வர் ஸ்டாலின்
இந்தியாவைக் காக்கும் வெற்றிப் பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்குகிறேன்! திருச்சிப் பாதை – வெற்றிப் பாதை! தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை. கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், இன்று (22-03-2024) திருச்சியில் நடைபெற்ற ’திருச்சி, பெரம்பலூர்’ மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு ஆற்றிய எழுச்சியுரையின் விவரம் வருமாறு: டெல்லி செங்கோட்டையை யார் கைப்பற்ற வேண்டும் என்று தீர்மானிக்க இந்த மலைக்கோட்டை மாநகரில் கடல்போல் திரண்டிருக்கும் தமிழ்ச் சொந்தங்களே! திருச்சி என்றாலே திருப்புமுனை! இப்போது இந்தியாவுக்கே திருப்புமுனை ஏற்படுத்த நாம் திரண்டிருக்கிறோம்! பல திருப்புமுனைகளை தமிழ்நாட்டுக்கு கொடுத்து, தமிழினத்தின் முன்னேற்றத்துக்காக தன்னுடைய வாழ்நாளெல்லாம் உழைத்த தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டுப் பரிசாக, ஒரு மக...
கலைஞர் எழுதுகோல் விருது’ பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – தமிழ்நாடு அரசு

கலைஞர் எழுதுகோல் விருது’ பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – தமிழ்நாடு அரசு

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
  கலைஞர் எழுதுகோல் விருது’ பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கலைஞர் பிறந்த தினமான ஜூன் 3ம் நாளன்று, ஒரு சிறந்த இதழியலாளருக்கு ‘கலைஞர் எழுதுகோல் விருது’ வழங்கி கவுரவிக்கப்படும். அந்த வகையில் 2023க்கான விருதுக்குரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருது ரூ.5 லட்சம் பரிசு தொகையுடன் பாராட்டு சான்றிதழும் அடங்கும். விருதிற்கான தகுதிகள்: விண்ணப்பதாரர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும். தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்திருக்க வேண்டும். பத்திரிகை பணியை முழுநேர பணியாக கொண்டிருக்க வேண்டும். இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பங்காற்றியிருக்க வேண்ட...
அமைதியான சூழல், ஆரோக்கியமான இருப்பிடம், கிராமத்து உணவு, பம்பு செட்டு குளியல்…!

அமைதியான சூழல், ஆரோக்கியமான இருப்பிடம், கிராமத்து உணவு, பம்பு செட்டு குளியல்…!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
  அமைதியான சூழல், ஆரோக்கியமான இருப்பிடம், கிராமத்து உணவு, பம்பு செட்டு குளியல்...! - ஆச்சரியப்படுத்தும் ‘லா வில்லா’ அம்சங்கள் சென்னைக்கு அருகே இயற்கை சொர்க்க பூமியாக உருவாகியுள்ள ‘லா வில்லா’! - நடிகர் கார்த்தி திறந்து வைத்தார் வேகமான உலகத்தில், அதிவேகமாக பயணிக்கும் மக்கள் இலைப்பாறுவதற்காக விடுமுறை நாட்களை கழிக்க, தேடிச் செல்லும் ரிசார்ட் போன்ற இடங்கள், ஆரவாரம் நிறைந்த, மன அமைதியை கெடுக்கும் இடங்களாக மாறி வரும் நிலையில், அமைதியான சூழல், அழகிய நிலப்பரப்பு, ஆரோக்கியமான உணவு, செயற்கைத்தனமற்ற இயற்கை வாழ்க்கை அனுபவத்தை அளிக்கும் ஒரு அருமையான வில்லா சென்னை அருகே திறக்கப்பட்டுள்ளது. இயற்கை அழகின் சரியான கலவையாகவும், கிராமத்து வாழ்க்கையின் அனுபவத்தை கொடுக்கும் ஒரு அமைதியான தளமாகவும்  வடிவமைக்கப்பட்டுள்ள ‘லா வில்லா’ (Laa Villa) மகாபலிபுரத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லு...
சிசிஎல் சென்னை ரைனோஸ் அணியினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

சிசிஎல் சென்னை ரைனோஸ் அணியினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

CINI NEWS, HOME SLIDER, NEWS, sports, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், விளையாட்டு செய்திகள்
      *(Celebrity Cricket League) சிசிஎல் சென்னை ரைனோஸ் அணியினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!* *இந்தியத் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (Celebrity Cricket League) தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது*. *இந்த ஆண்டு இப்போட்டியில் கலந்துகொள்ளும், சென்னை ரைனோஸ் அணியினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்*. செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில், சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பஞ்சாப் தி ஷெர் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன‌ர். திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி என்பதால், ஆண்டுதோறும் இதற்கான எதிர்பார்ப்பு, மேலும் மேலும் அதிகரித்து கொண்டு தான் வருகிறது. சென்னை அணியின் கேப்டனாக ஆர்யா செயல்பட்டு வருகிறார் மற்...
மூன்றாவது “வாகோ இந்தியா ஓபன் இண்டர்நேஷனல் கிக் பாக்ஸிங்” சாம்பியன்ஷிப்பில் 2 தங்கப்பதக்கங்கள் வென்று பெருமை சேர்த்த நிவேதா!

மூன்றாவது “வாகோ இந்தியா ஓபன் இண்டர்நேஷனல் கிக் பாக்ஸிங்” சாம்பியன்ஷிப்பில் 2 தங்கப்பதக்கங்கள் வென்று பெருமை சேர்த்த நிவேதா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  *விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்திய கேலோ இந்தியா போட்டியில் தங்கம் வென்ற நிவேதா தற்போது மூன்றாவது வாகோ இந்தியா ஓபன் இண்டர்நேஷனல் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப்பில் இரண்டு தங்கப்பதக்கங்கள் வென்று பெருமை சேர்த்தார்!* விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பல வெற்றிகளை விளையாட்டு வீரர்கள் அடைந்து வருகின்றனர். அந்த வகையில், கேலோ இந்தியா போட்டியில் தங்கம் வென்ற நிவேதா தற்போது புதிய சாதனைப் படைத்துள்ளார். புதுதில்லி ஜே.டி.ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மூன்றாவது வாகோ இந்தியா ஓபன் இண்டர்நேஷனல் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2024, பிப்ரவரி 7 முதல் 11 2024 வரை நடைபெற்றது. இதில் நிவேதா 2 தங்கப்பதக்கங்களை வென்றார். இதுமட்டுமல்லாது, பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர் நிவேதா. இதற்குமுன்பு, துருக்கியில் நடைபெற்ற ஏழாவத...