செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

செய்திகள்

5 மில்லியனைக் கடந்தது விஜய்யின் ‘பைரவா’ டிரைலர்

5 மில்லியனைக் கடந்தது விஜய்யின் ‘பைரவா’ டிரைலர்

செய்திகள், முன்னோட்டம்
விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பைரவா. 'அழகிய தமிழ்மகன்' புகழ் பரதன் இயக்கியிருக்கும் இப்படத்தை விஜயா வாஹினி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.பொங்கல் வெளியீடாக வரவிருக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு தற்போது மும்முரமாக உள்ளது. இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு வெளியான இப்படத்தின் டிரைலர் இணையத்தில் தற்போது 50,62,677 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.இதனால் விஜய் ரசிகர்கள் மிகப்பெரும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர். பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்தாலும் படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை. எனினும் படத்தின் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது....

பிறந்தநாள் வாழ்த்து

செய்திகள்
இன்று பிறந்தநாள் காணும் திரு O.A.K.தேவர், பின்னணி பாடகர் திரு.நரேஷ் நாயர், பின்னணி பாடகி சைந்தவி, சின்னத்திரை நடிகர் வசந்த் ஆகியோருக்கு சென்னை ராயல் சினிமா பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறது.  
தமிழ் சினிமாவிற்கு புது ரத்தம் பாய்ச்சுகிற.“வீரையன்”  இயக்குநர் சீனு ராமசாமி பேச்சு

தமிழ் சினிமாவிற்கு புது ரத்தம் பாய்ச்சுகிற.“வீரையன்” இயக்குநர் சீனு ராமசாமி பேச்சு

செய்திகள்
ஃபாரா சரா பிலிம்ஸ் சார்பில் பரீத் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் இனிகோ பிரபாகர், ஷைனி, ஆடுகளம் நரேன், வேலா.இராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ள "வீரையன்" படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர்கள் சீனு ராமசாமி, சற்குணம், எஸ்.ஆர்.பிரபாகரன், கே.எஸ்.தங்கசாமி மற்றும் 'கில்டு' தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் எஸ்.பி.பி. சரண் உள்பட பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர். ‘வீரையன்’ இசைத்தட்டை இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட இயக்குநர்கள் சற்குணம் மற்றும் எஸ்.ஆர்.பிரபாகரன் பெற்றுக் கொண்டனர். சீனு ராமசாமி இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், முதலில் “வீரையன்” படத்தின் தயாரிப்பாளருக்கு என் பாராட்டுகள். ஏனெனில், இந்த மாதிரியான படங்கள் தான் தமிழ் சினிமாவில் பல புதிய சக்திகள் பிறக்கும் வழியை திறக்கிறது. இந்த மாதிரியான படங்கள் தான் பல திறமையான கலைஞர்களை வழங்குவதன் மூலமாக தம...
பவன்கல்யாணுடன் மீண்டும் ஸ்ருதிஹாசன் ஜோடி..! .

பவன்கல்யாணுடன் மீண்டும் ஸ்ருதிஹாசன் ஜோடி..! .

செய்திகள்
தமிழில் அஜித் குமார் மற்றும் தமன்னா நடிப்பில் சிவா இயக்கத்தில் பெரும் வெற்றி பெற்ற 'வீரம்' தற்போது கட்டமா ராயுடு என்ற பெயரில் தெலுங்கில் தயாராவது தெரிந்ததே. இந்தப் படத்தில் பவன் கல்யாணுக்கு இணையாக சுருதி ஹாசன் நடித்து வருகிறார். பெரும் வெற்றி பெற்ற கப்பார் சிங் படத்தை தொடர்ந்து இந்த ஜோடியின் இரண்டாம் படம் இது.துரித வேகத்தில் படமாக்க பட்ட இந்தப் படம் இப்பொழுது முடியும் தருவாயில் உள்ளது.பொள்ளாச்சியை தொடர்ந்து இப்பொழுது ஹைதராபாதில் படப்பிடிப்பு தொடர்ந்து நடை பெற்று வருகிறது. பவன் கல்யாணுடன் ஸ்ருதி ஹாசன் நடித்த பாடல் காட்சி பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்த போது ஆரவாரம் ஒரு தமிழ் படத்துக்கு இணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வருகின்ற தெலுங்கு வருட பிறப்பு அன்று வெளி இடப படும் இந்தப் படம் ஸ்ருதி ஹாசனை தென்னிந்திய திரை உலகில் மேலும் உச்சத்தில் உயர்த்தி செல்லும் என்று எதிர்ப்பார்க்க படுகிறது.தயா...
சமூக பொறுப்புடன் உருவாக்கப்பட்ட  “எஸ்-3“ – இயக்குனர் ஹரி

சமூக பொறுப்புடன் உருவாக்கப்பட்ட “எஸ்-3“ – இயக்குனர் ஹரி

செய்திகள்
சிங்கம் படத்தின் 3-வது பாகம் “எஸ்-3“ என்ற பெயரில் படமாக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ள இந்த படத்தில் சிங்கம் முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் நடித்து உள்ளனர். புதிதாக சுருதிஹாசன், சூரி, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க ஆந்திர மாநிலத்தை சுற்றி நடக்கக்கூடிய கதையை வைத்து படம் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தில் இந்தி சினிமாவில் இருந்து புதிய வில்லன்கள் நடித்துள்ளனர். படத்தின் சில காட்சிகள் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் எடுக்கப்பட்டு உள்ளன. “எஸ்-3“ படம் வருகிற 26-ந் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது. இந்த படத்தில் 7 விமான நிலையங்களில் காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன. மேலும் 8 வகையான விமானங்களை இந்த படத்தில் பயன்படுத்தி உள்ளோம். இந்த படம் இந்திய நாட்டுக்கு பெருமை சேர்க்கக்கூடிய, சம...
மாரியப்பன் தங்கவேலு வாழ்க்கை வரலாறு படமாகிறது: ஐஸ்வர்யா தனுஷ் இயக்குகிறார்

மாரியப்பன் தங்கவேலு வாழ்க்கை வரலாறு படமாகிறது: ஐஸ்வர்யா தனுஷ் இயக்குகிறார்

செய்திகள்
பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்கில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். அவர் 1.89 மீட்டர் உயரம் தாண்டி அசத்தினார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தை ஐஸ்வர்யா தனுஷ் இயக்குகிறார். இதற்காக அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே மாரியப்பனை சந்தித்து, அவரது அனுபவங்களை சேகரித்து பதிவு செய்திருக்கிறார். இந்த படத்தில் மாரியப்பன் தங்கவேலு கதாபாத்திரத்தில் நடிகர் தேர்வு நடக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இந்த படம் உருவாகிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களை இயக்கிய ராஜூமுருகன் வசனம் எழுதுகிறார். இந்த படத்துக்கு ‘மாரியப்பன்’ என்று பெயர் சூட்டிய...
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி – அடிமைப் பெண், ஆயிரத்தில் ஒருவன் திரையீடு

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி – அடிமைப் பெண், ஆயிரத்தில் ஒருவன் திரையீடு

சினி நிகழ்வுகள், செய்திகள்
    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவினால் தள்ளிவைக்கப்பட்ட சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ‘அடிமைப் பெண்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஆகியப் படங்கள் சிறப்பு பிரிவின்கீழ் திரையிடப்படுகின்றன. தமிழ்நாடு அரசின் ஆதரவுடன் தமிழ் சினிமா தயாரிப்பு தொடர்பான பல சங்கங்களை சேர்ந்த ’இன்டோ சினி அப்ரிசிசேஷன்’ என்ற அமைப்பு கடந்த ஐந்தாண்டுகளாக ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் சர்வதேச திரைப்பட விழாவை சென்னை நகரில் நடத்தி வருகிறது. அவ்வகையில், கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதியில் இருந்து 22-ம் தேதிவரை சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 5-ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, சென்னை சர்வதேச திரைப்பட விழா தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, ஜனவரி 5 முதல் 12 வரை ஒருவார காலத்துக்கு இந்த விழா ந...
பெப்பர்ஸ் டிவியில் டயல் பண்ணு… சிரி கண்ணு…

பெப்பர்ஸ் டிவியில் டயல் பண்ணு… சிரி கண்ணு…

செய்திகள், முன்னோட்டம்
உங்கள் பெப்பர்ஸ் டிவியில் உங்களை மகிழ்விக்க இளமையான, புதுமையான, கலகலப்பான காமெடி நிகழ்ச்சி “டயல் பண்ணு... சிரி கண்ணு” இந்த நிகழ்ச்சியில் நேயர்கள் டயல் பண்ணி எங்களோடு ஜாலியாக , கேலியாக பேசலாம், கலாக்கலாம், ஜோக் சொல்லலாம். இந்த நிகழ்ச்சியை அசார்ம் ஜீவிதா தொகுத்து வழங்குகிறார்கள். இவர்கள் அரட்டை அடித்து பிரண்ட்லியாக நேயர்களிடம் பேசுவது பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. வாரந்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கைழமைகளில் மாலை 6.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். நீங்களும் டயல் பண்ணி பேசலாம், சிரித்து மகிழலாம்....