இயக்குனர் பா.இரஞ்சித்தின் ‘மார்கழியில் மக்களிசை 2020’
வானம் கலைவிழாவை தொடர்ந்து இயக்குனர் பா.இரஞ்சித்தின் அடுத்த அறிவிப்பு :
மார்கழியில் மக்களிசை,
நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ”மார்கழியில் மக்களிசை 2020” எனும் நிகழ்ச்சி சென்னையில் பல்வேறு அரங்கங்களில் 8 நாட்கள் நடைபெறவுள்ளதாக இயக்குனர் பா.இரஞ்சித் அறிவித்துள்ளார்.
திரைப்படங்கள் இயக்குவதைக் கடந்து பல்வேறு சமூக, கலைப் பணிகளையும் மேற்கொண்டு வருபவர் இயக்குனர் பா.இரஞ்சித். இவர் தனது நீலம் பண்பாட்டு மையம் மூலம் ஆவணப்படங்களை தயாரித்தல், நாடகங்களை அரங்கேற்றுதல் என சினிமாவை தாண்டிய பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். மேலும் இசை வரலாற்றில் முதல் முறையாக பாப், ராப், கானா, கிராமியம், கர்நாடக இசை என அனைத்து வகையான இசைகளையும், இசைக் கலைஞர்களையும் இணைத்து ‘Casteless Collective’ எனும் இசைக்குழுவையும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார்.
‘Casteless Collective’ இசைக்குழு இதுவரை இ...
