பலத்த மழை திருப்பதியில் 2 நாட்கள் நடை பாதைகள் மூடல்
பலத்த மழை திருப்பதியில் 2 நாட்கள் நடை பாதைகள் மூடல்
திருப்பதி கோவிலில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் தரிசனத்திற்காக வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து திருப்பதிக்கு வாகனங்கள் மூலம் வரும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக மலைப்பாதையில் நடந்து சென்று தரிசனம் செய்வது வழக்கம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் காரணமாக அலிபிரி வழியாக செல்லும் நடைபாதையில் மழை வெள்ளம் புகுந்தது. மேலும் நடைபாதையில் பாறைகள் மற்றும் மண் சரிவு ஏற்பட்டதால் 2 நாட்கள் நடைபாதை மூடப்பட்டன.
இந்த நிலையில் புயல் சின்னம் காரணமாக பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலிபிரி வழியாக செல்லும் மலைப்பாதை மற்றும் ஸ்ரீவாரிமெட்டு ஆகிய நடைபாதைகள் இன்றும் நாளையும் ம...
