A.ஜெயக்குமார் வழங்கும் ஜெ.கே.மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு "88" என்று பெயரிட்டுள்ளனர்.
இந்தப்படத்தில் மதன் கதானாயகனாக நடிக்கிறார். கதானாயகியாக உபாஷ்னாராய் நடிக்கிறார். மற்றும் டேனியல் பாலாஜி ஜெயப்பிரகாஷ் ஜி.எம். குமார்
பவர் ஸ்டார், அப்புகுட்டி, சாம்ஸ், எஸ்.பி.ராஜா ,கடம் கிஷன்,மீராகிருஷ்ணன் இவர்களுடன் ஜான் விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் மதனிடம் கேட்டோம்...
இன்று விஞ்ஞானம் ரெக்கக் கட்டிப் பறக்கிறது.
பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தப் பட்ட செல்போன்களின் பயன்பாடு இன்று எல்லை கடந்து விட்டது. கைக்குள்ளேயே ஒரு உலகத்தை கொண்டு வந்த நவீனம் தான் செல்போன். எதையெல்லாம் வெளிப்படையாக தெரிவிக்கக் கூடாதோ அதையெல்லாம் வெளிப்படையாக தெரிவிப்பதால் என்ன மாதிரியான சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்பதைத் தான் இதில் அலசி இருக்கிறோம்.
அதிலும் பெண்கள் எதையெல்லாம...
Blue eye productions என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கும் படத்திற்கு "தோட்டம்" என்று பெயரிட்டுள்ளனர். இந்தப்படத்தில் சிங்கை ஜெகன் நாயகனாக நடிக்கிறார்.
முக்கிய வேடத்தில் கே.எஸ்.மணியம் நடிக்கிறார்..
நாயகியாக தனா மற்றும் விவியாஷான் என்ற சீன நடிகையும் நடிக்கிறார்.
மற்றும் ரூபன் லோகன் தியாகு, ஜீவி. அகில்வர்மன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் அரங்கண்ணல் ராஜ் கூறியதாவது.
ஒவ்வொரு நாடும் பொருளாதார முன்னேற்றம் அடைவதே அந்த நாட்டின் விவசாய வருமானத்தைக் கொண்டே.
இலங்கை, மலேசியா மற்ற இதர நாடுகளும் இதில் அடங்கும்..
அந்த விவசாய கூலித் தொழிலாளியாகப் பயன்படுத்தப் பட்டவர்கள் பெரும்பாலும் இந்தியர்களே. அதிலும் குறிப்பாக தமிழர்களே.
அப்படி உழைத்து உருவாக்கிய தோட்டங்களும் பெரும் வணிக சந்தையாகி விட்டது..
தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கை மட்டும் அதே நிலையில் தான் இருக்கிறது.
அப்படி உருவாக்கிய தோ...
இயக்குனர் பாலுமஹேந்திராவின் சினிமா பட்டறையிலிருந்து பயின்று வந்துள்ள ஸ்ரீகாந்தன் இயக்கியுள்ள முதல் படம் 'தப்பு தண்டா '. இப்படத்தில் சத்யா கதாநாயகனாகவும் , ஸ்வேதா கதாநாயகியாகவும் , ஜான் விஜய் மற்றும் 'விசாரணை ' புகழ் அஜய் கோஷும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . இப்படம் ஜூலை 15ஆம் தேதி ரிலீஸ் ஆகா உள்ளது.
'' ஒரு படத்திற்கும் அதன் உருவாக்கத்திற்கும் நடிகர்கள் போடும் உழைப்பு, தொழில்நுட்ப கலைஞ்ஜர்களின் அர்ப்பணிப்பு, இயக்குனரின் தவம் அனைத்தும் முழுமை பெறுவது அப்படம் மக்களிடம் சரியாக கொண்டு போய் சேர்க்கும் விநியோகஸ்தர்கள் கையில் போய் சேரும்போது மட்டுமே. அவ்வாறான விநியோகஸ்தர் ஜோன்ஸ் அவர்கள் எங்களின் 'தப்பு தாண்டா' விற்கு கிடைத்துள்ளது எங்களுக்கு மிக மிக மகிழ்ச்சியாகும் .தரமான ஜனரஞ்சக படங்களை மட்டுமே வாங்கி வெளியிடும் ' செஞ்சுரி இன்டெர்னஷனல்ஸ்' ன் ஜோன்ஸ் அவர்கள் எங்களது 'தப்பு தாண்டா'...
நல்ல படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுக்கும் முயற்சியில் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்து கடந்த வாரம் வெளியான படம் தான் 'மரகத நாணயம்'. ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், முண்டாசுப்பட்டி ராம்தாஸ், டேனி ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் ஒருமித்த பாராட்டில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வாரம் புதுப்படங்கள் வெளியாகி இருந்தாலும் அதே அளவு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது மரகத நாணயம். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
உறுமீன் படத்தை தொடர்ந்து நாங்கள் எடுக்கும் அடுத்த படம் வயது வரையறையின்றி அனைத்து மக்களாலும் ரசிக்கப்படுகிற படமாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம். அதற்காக நிறைய கதைகளை கேட்டேன். அதில் ஒன்று தான் சரவண் சொன்ன க...
தமிழ் சினிமா உலகில் தனக்கென்று ஒரு தனி முத்திரையை பதித்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு. இவரது ஒவ்வொரு படமும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்பை உண்டாக்கும் . அவ்வாறான இவர் தனது அடுத்த படத்தின் விவரங்களையும் மோஷன் போஸ்ட்டரையும் வெளியிட்டுள்ளார் .
T.சிவா' வின் 'அம்மா கிரேஷன்ஸ்' தயாரிப்பில் உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு 'பார்ட்டி' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலன் 'அம்மா கிரேஷன்ஸ் ' தனது 25 ஆம் ஆண்டில் அடிவைக்க உள்ளது.
இளசுகளின் நாடியை என்றுமே நன்கு அறிந்து வைத்திருக்கும் வெங்கட் பிரபு 'பார்ட்டி ' என படத்திற்கு பெயரிட்டுள்ளதால் , அவரது ரசிகர்கள் குதூகலமடைந்துள்ளனர். இதில் பிரேம்ஜி அமரன், வெங்கட் பிரபுவின் படத்திற்கு முதல் முறையாக இசையமைக்க உள்ளார். KL பிரவீன் எடிட்டிங் செய்யவுள்ளார் .
இப்படத்திற்க்காக பெரும் நட்சத்திர பட்டாளத்தை வெங்கட் பிரபு ஒன்று சேர்த்துள்ளார். சத்யராஜ் , நாசர...
சாயிஷா சிறுவயதில் இருக்கும்போது அவளுடைய பெற்றோர் ஒரு விபத்தில் இறந்துவிட, அதன்பிறகு சாயிஷாவை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு பிரகாஷ் ராஜ் வசம் வருகிறது. அதன்பின்னர், பிரகாஷ் ராஜ் சாயிஷாவின் பெயரில் நிறைய தொழில்கள் தொடங்கி சாயிஷாவை பெரிய தொழிலபதிர் ஆக்குகிறார். சாயிஷா பெயரிலேயே எல்லா சொத்துக்களும் இருப்பதால், தன்னுடைய மகனான வருணுக்கு அவளை திருமணம் செய்துவைத்து சொத்துக்களை தன்வசமாக்க நினைக்கிறார் பிரகாஷ் ராஜ்.
இந்நிலையில், அந்தமானுக்கு சுற்றுலா செல்லும் போது, காட்டுவாசியான ஜெயம் ரவியின் மீது கார் ஏற்றிவிடுகிறார்கள். அடிபட்டு கிடக்கும் ஜெயம் ரவிக்கும் சிகிச்சை அளிப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்கிறார்கள். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்க முடியாததால் இந்தியா கொண்டு வந்துவிடுகிறார்கள். அவருக்கு சிகிச்சை அளித்து நல்ல நிலைமைக்கு கொண்டு வருகிறார்கள். ஆனால், அவர் பழைய நினைவுகளை இழந்துவிடுகிறார்.
கா...
நாயகிகளாக பிரியங்கா ஷர்மா, நட்சத்திரா நடிக்கிறார்கள்.
Eye talkies என்ற பட நிறுவனம் சார்பாக சதீஷ் சந்திரா பாலேட் தயாரிக்கும் படத்திற்கு " 143"என்று பெயரிட்டுள்ளார்..
காதலர்களின் சங்கேத வார்த்தையாக கருதப்பட்ட 143அதாவது I LOVE YOU என்கிற வார்த்தைகளின் சுருக்கமே 143 ..
இந்த டைட்டில் இது வரை இன்றைய தலைமுறை இயக்குனர்களால் கண்டு கொள்ளப் படாமல் விட்டிருப்பது ஆச்சர்யம் தான். அதை பிடித்துக் கொண்டார் இயக்குனர் ரிஷி.
அவரே கதானாயகனாகவும் நடித்து எழுதி இயக்குகிறார்.
நாயகிகளாக பிரியங்கா ஷர்மா நட்சத்திரா இருவரும் அறிமுகமாகிறார்கள்..
அனுபவ நடிகரான விஜயகுமார் பக்குவபட்ட கே.ஆர்.விஜயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்கள்..
மற்றும் சுதா ராஜசிம்மன் பிதாமகன் மகாதேவன் நெல்லைசிவா மோனா முண்டாசுப்பட்டி பசுபதி இவர்களுடன் சதீஷ் சந்திரா பாலேட் முக்கிய வேடம் ஏற்றிரு...
சாமி 2வில் வில்லனாக நடிக்க நடிகர் பாபி சிம்ஹா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
"சாமி படத்தின் முதல் பாகத்தில் ‘பெருமாள் பிச்சை ’என்ற வில்லன் கேரக்டர் வலுவாக இருக்கும். தற்போது தயாராகவிருக்கும் சாமி 2 வில் பெருமாள் பிச்சையை விட பத்து மடங்கு பலசாலியாகவும், புத்திசாலியாகவும் வில்லன் கேரக்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்த கேரக்டரில் பாபி சிம்ஹா புதிய அவதாரம் எடுக்கவிருக்கிறார்" என்றார் இயக்குநர் ஹரி.
இயக்குனர் ஹரி மேலும் கூறுகையில் "நடிகர் விக்ரம் ஆக்க்ஷன் ஹீரோவாக மட்டுமல்லாமல் நல்ல பர்ஃபாமராகவும் இருப்பது அவரின் தனி அடையாளம். அவருடன் மோதும் வில்லன், அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஒரு நல்ல பர்ஃபாமராக இருக்கவேண்டும். அதனால் தான் பாபி சிம்ஹாவை வில்லனாக நடிக்க தேர்வு செய்து உள்ளோம்".
...