வியாழக்கிழமை, ஜூன் 18
Shadow

Author: Kodanki

உதய நிதி ஸ்டாலினை தேடிய அதிமேதாவிகள்..!

உதய நிதி ஸ்டாலினை தேடிய அதிமேதாவிகள்..!

செய்திகள்
நட்பையும் நகைச்சுவையையும் மையமாக கொண்டு உருவாகி இருக்கின்றது, அறிமுக இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன் இயக்கி இருக்கும் 'அதி மேதாவிகள்' திரைப்படம். 'அப்சலூட் பிச்சர்ஸ்' சார்பில் மால்காம் தயாரித்து வரும் இந்த 'அதி மேதாவிகள்' திரைப்படத்தில் பிரபல தொகுப்பாளர் சுரேஷ் ரவி (அறிமுகம்) மற்றும் 'சதுரங்க வேட்டை' புகழ் இஷாரா நாயர் முன்னணி கதாபாத்திரங்களிலும், தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், ரேணுகா, மது (கோலி சோடா) மற்றும் மாரி படப்புகழ் கல்லூரி வினோ முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. "நானும் ஒரு அரியர்ஸ் மாணவன் என்பதால், இந்த படத்தின் கதையை முதல் முறையாக கேட்ட பொழுதே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. எங்கள் மேல் நம்பிக்கை வைத்து, இந்த படத்தை தயாரித்தது மட்டுமின்றி எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் பேராதரவாக இருந்த எங்கள் அதி மேதாவிகள் படத்தின் தயாரிப்பாளர் மால்காம் அவர்கள...
அன்னக்கிளி ஆர்.செல்வராஜின் மகனை பாராட்டிய  பாரதிராஜா..!

அன்னக்கிளி ஆர்.செல்வராஜின் மகனை பாராட்டிய பாரதிராஜா..!

செய்திகள்
பிரபல கதாசிரியர் அன்னக்கிளி ஆர்.செல்வராஜின் மகனும், இயக்குனர் மணிரத்னத்தின் இணை இயக்குனருமான தினேஷ் செல்வராஜின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’. இப்படம் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கிறது. கார்த்திகேயன், ஷாரியா, அருள்ஜோதி, ஜார்ஜ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தை குறித்து இயக்குனர் பாரதிராஜா தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது, கதைகளின் கருபூலம், கதாபாத்திரங்களின் கதாநாயகன் என் நண்பன் ஆர்.செல்வராஜின் கடைக்குட்டியே. நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பு இல்லை’ ஒரு ஜனரஞ்சக படம் மட்டுமல்ல, உயர பறக்க துடிக்கும் இன்றயை இளைஞர்களுடைய எண்ணங்களின் பிரதிபலிப்பு. இந்த சமூகத்தில் கொட்டிக்கிடக்கும் உளவியல் உண்மைகளை எந்த சமரசமின்றி திரையில் கொண்டு வந்ததற்காக ஒரு கூடை பூக்கள் உனக்காக காத்திருக்கிறது. இ...
நியூயார்க் இந்திய திரைப்படம் விழாவிற்கு தேர்வான ‘ஒரு கிடாயின் கருணை மனு’

நியூயார்க் இந்திய திரைப்படம் விழாவிற்கு தேர்வான ‘ஒரு கிடாயின் கருணை மனு’

செய்திகள்
இந்திய திரையுலகின் முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி கொண்டிருக்கும் 'ஈரோஸ்' தயாரித்து இருக்கும் 'ஒரு கிடாயின் கருணை மனு' திரைப்படம், நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கின்றது. இதன் மூலம் உலகளவில் உள்ள சினிமா ரசிகர்களின் உள்ளங்களை 'ஒரு கிடாயின் கருணை மனு' திரைப்படம் கவர்ந்து விடும் என்பதை உறுதியாகவே சொல்லலாம். இந்த படத்தை 'காக்கா முட்டை' புகழ் மணிகண்டனின் உதவியாளரான சுரேஷ் சங்கையா இயக்கி இருக்கிறார். இவர் உதவி இயக்குநராக பணிபுரிந்த 'காக்கா முட்டை' திரைப்படமும், பல சர்வேதச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பாராட்டுகளை குவித்தது குறிப்பிடத்தக்கது. "தரமான கதையம்சம் நிறைந்த திரைப்படங்கள் அனைத்துமே சர்வேதச திரைப்பட விழாக்களால் எளிதில் அடையாளம் கொள்ளப்படுகிறது. அந்த வகையில் எங்களின் ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படம் நியூயார்க் இந்...
‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ கதாநாயகியாக   ‘குக்கூ’ மாளவிகா நாயர்..!

‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ கதாநாயகியாக ‘குக்கூ’ மாளவிகா நாயர்..!

செய்திகள்
'குக்கூ' படம் மூலம் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் உள்ளங்களையும் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் கவர்ந்து சென்றவர் மாளவிகா நாயர். தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகிகளின் பட்டியலில் இருக்கும் இவர், தற்போது 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விநியோக துறையில் நிலையான வெற்றியை தழுவி வரும் 'ஆரா சினிமாஸ்' மகேஷ் கோவிந்தராஜ் தயாரிக்கும் இந்த படத்தை, அறிமுக இயக்குநர் அவினாஷ் ஹரிஹரன் (குறும்பட மற்றும் விளம்பர பட இயக்குநர்) இயக்குகின்றார். 'ராஜதந்திரம்' புகழ் வீரா கதாநாயகனாக நடிக்கும் இந்த அரசியல் கலந்த நகைச்சுவை திரைப்படத்தில் மேட்லி ப்ளூஸ் இசையமைப்பாளராக பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. "நடிப்பிற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கொள்ளும் ஒரு நடிகை தான் எங்கள் படத்தின் கதைக்கு ஏற்றவராக இருக்க முடியும். அந்த வகையில் எங்கள் அனைவரின் மனதிலும் தோன்ற...
ஒரு காதலின் புதுப்பயணம் ஆல்பம் வெளியீடு ..!

ஒரு காதலின் புதுப்பயணம் ஆல்பம் வெளியீடு ..!

சினி நிகழ்வுகள்
இயக்குநர்களின் முதல் கதாநாயகன் வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள்தான் என்று ரஜினி முருகன்' புகழ் இயக்குநர் பொன்ராம். ஜுபின் இசையில் குமரன் எழுதி இயக்கிய 'ஒரு காதலின் புதுப்பயணம்' ஆல்பத்தின் வெளியீட்டு விழா இன்று பிரசாத் ஆய்வுக்ககூடம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் ஆல்பத்தை பொன்ராம் வெளியிட்டார். நடிகர்கள் மைம் கோபி,பிரஜின் ,நிஷாந்த் தயாரிப்பாளர் இளையஅரசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். *விழாவில் இயக்குநர் பொன்ராம் பேசும்போது* " இந்தக் குமரன் என்னிடம் உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டு வந்தார். அப்போது வாய்ப்பு தரமுடியவில்லை .அடுத்த படத்துக்கு பார்க்கலாம் என்றேன். ஆனால் அடுத்து இப்படி ஒரு வாய்ப்பு வந்து இருக்கிறது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. புதிய படமும் வந்து விட்டது. ஒருவரை நம்பி படவாய்ப்பு கொடுப்பது என்பது சாதாரணம் அல்ல. முதல் படவாய்ப்பு கொடுக்கும் தயாரிப்பாளர்தான் நமக்கு கதாநாயகன்- ஹீ...
பிலிம் சேம்பர் புதிய நிர்வாகிகளுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து..!

பிலிம் சேம்பர் புதிய நிர்வாகிகளுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து..!

செய்திகள்
தென்னிந்திய ​​ஃபிலிம் சேம்பர் புதிய நிர்வாகிகளுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து...!! தென்னிந்திய ​​ஃபிலிம் சேம்பருக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கும் நடிகர் சங்கம் தனது வாழ்த்து தெரிவித்துள்ளது, "சேம்பருக்கு புதியதாக தேர்ந்தெடுக்க பட்டுள்ள தலைவர் திரு.L சுரேஷ், துணைத்தலைவர்களாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள திரு.A.சாய்பிரசாத், திரு.A.கணேஷ் திரு.V.P.மாதவன் நாயர், திரு.A.V.M.K.ஷண்முகம், கௌரவ செயலாளர்களாக தேர்ந்தெடுக்க பட்டுள்ள திரு.ரவி கொட்டாரக்கரா, திரு.N.ராமசாமி மற்றும் பொருளாளர் திரு.K.கிருஷ்ண ரெட்டி ஆகியோரை தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார வாழ்த்துவதோடு தங்களது சங்கத்திற்கு முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் தெரியப்படுத்திக்கொள்கிறோம். மேலும் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கபட்டுள்ள தென்னிந்திய நடிகர் சங்க செயற் குழு உறுப்ப...
பிரமாண்டமான முறையில் நவீன தொழில் நுட்பத்தில் நடந்த பாகுபலி 2 விழா..!

பிரமாண்டமான முறையில் நவீன தொழில் நுட்பத்தில் நடந்த பாகுபலி 2 விழா..!

சினி நிகழ்வுகள்
ஐதராபாத்தில் நடந்த ‘பாகுபலி-2’ படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா நவீன தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பப்பட்டது. உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘பாகுபலி-2’ டிரைலர் சமீபத்தில் இணையதளத்தில் வெளியானது. இதை 10  கோடிக்கும் அதிகமானவர்கள் பார்த்தனர். இது உலகின் ‘டாப்-10’ டிரைலரிலும் இடம் பெற்றுள்ளது. ‘பாகுபலி-2’ படத்தில் தெலுங்கு இசை வெளியீட்டு விழா ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ஸ்டுடியோவில் பிரமாண்டமாக நடந்தது.  இதில் ராஜமவுலி, பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  பிரபல இந்தி டைரக்டர் கரண்ஜோகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நவீன தொழில்நுட்பங்களுடன் பிரமாண்டமாக தயாராகி  இருக்கும் ‘பாகுபலி-2’ தெலுங்கு இசை வெளியீட்டு விழாவும் நவீன தொழில்நுட்பமான ‘4 கே’ முறையில் ஒளிபரப்பப்பட்டது. இதன்  மூலம் இந்த பிரமாண்ட நிகழ்ச்சியை 360 டிகிரி கோ...