HOME SLIDER
ரஜினி-ஷங்கர் கூட்டணியின் 2.0 பட ஆடியோ 27ம் தேதி துபாயில் பிரமாண்டமாக வெளியாகிறது..!
ரஜினி-ஷங்கர் கூட்டணியின் 2.0 பட ஆடியோ 27ம் தேதி துபாயில் பிரமாண்டமாக வெளியாகிறது..!
ஷங்கர் இயக்கத்தில் மெஹா பட்ஜெட்டில் உருவாகி வரும் ரஜினியின் 2.0 படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதன் ஆடியோ ரிலீஸ் துபாயில் பிரமாண்டமான கலை நிகழ்ச்சியில் வெளியிடப்படுகிறது. வரும் 27ம் தேதி இந்த விழா துபாயில் நடக்கிறது.
தமிழ், இந்தி முன்னணி நட்சத்திரங்கள் பலர் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
...
ஜி.வி.பிரகாஷின் 100% காதல்…!
100% காதல்
கிரியேட்டிவ் சினிமாஸ் NY - சுகுமார் மற்றும் என்.ஜே என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரிக்கும் “100% காதல்” - தமிழ் திரைப்படத்தை எம். எம். சந்திரமௌலி இயக்க, கதாநாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார்
முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான எம்.எம். சந்திரமௌலி, இத்திரைப்படத்தை தமிழில் இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
அதிரடி, மர்மம், வன்மம் என துரோகங்களும் வன்முறைகளும் நிறைந்த திரைப்படங்கள் ஆட்சி செய்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், முற்றிலும் காதலையே மையமாக கொண்டு வரவிருக்கும் 100% காதல், இத்தகைய சூழலில் ஒரு மாபெரும் புதிய திருப்பத்தையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தவிருக்கிறது.
தோட்டா தரணி கலைக்கு பொறுப்பேற்கிறார். நடன அமைப்பு பிரேம் ரக்ஷித், நிக்சன். கவிதா சச்சியும், A. மேக்னாவும் இணைந்து உடை வடிவமைப்பு வேலைகளை கவனித்து கொள்கிறார்கள்.
இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ...
“எக்ஸ் வீடியோஸ்” படத்தின் லாபத்தில் அரசுப் பள்ளிகளுக்கு கழிப்பறை கட்ட இயக்குநர் திட்டம்!
கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் சஜோ சுந்தர் இயக்கியுள்ள படம் ' எக்ஸ் வீடியோஸ் ' .
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று ஆர்.கே.வி .ஸ்டுடியோவில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் சஜோசுந்தர் பேசும் போது ,
" நான் இந்தப் படத்தை சமூக விழிப்புணர்வு நோக்கத்தில் தான் எடுத்திருக்கிறேன். தொழில்நுட்பம் இன்று எந்த அளவுக்கு நம்மை அபாய கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்பதை எச்சரிக்கும்படி ஒரு படம் தேவை என்பதை உணர்ந்து இப்படத்தை எடுத்திருக்கிறேன். ஒரு ஆண்ட்ராய்ட் போன் இருந்தால் போதும் நம்மை எங்கிருந்தாலும் கண்காணிக்க முடியும். நம்மை வைத்து எப்படி வேண்டுமானாலும் தகவல் தொடர்பைத் தவறாக பயன்படுத்த முடியும். அந்த அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது . என் நண்பர் ஒருவர் எனக்கு , தான் பார்த்த பல விதமான வீடியோக்களைப் பகிர்வார். அப்படி ஒரு முறை அவர் அனுப்பிய வீடியோவைப்...
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணத்தின் மர்மத்தை உடைக்கும் “உயில் ஒன்று “
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணத்தின் மர்மத்தை உடைக்கும் "உயில் ஒன்று "
ஆம்ஸி பிலிம்ஸ் சார்பாக ஆம்ஸ்ட்ராங் பிரவீன் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் தீபன் இயக்கியிருக்கும் திரைப்படம் "உயில் ஒன்று"
இன்றும் பல புரட்சிகர இயக்கங்களுக்கு ரோல் மாடலாக இருப்பவர் நேதாஜி. நேதாஜி மரணம் இன்றுவரை உலக நாடுகளில் பேசப்படுகிறது. அவர் இறந்து விட்டார் என்று ஒரு சாரரும், இன்னும் இருக்கிறார் என்று நம்புபவர்களும் உண்டு. இதற்கான விடையை சொல்லும் படம் "உயில் ஒன்று"
இந்தியாவில் முதல் முறையாக 360 டிகிரி "விர்ச்சுவல் ரியாலிட்டி" virtual reality தொழில் நுட்பத்தில் படத்தின் தலைப்பை வெளியிட இருக்கிறார்கள். 60 சதவிகிதம் புது டெக்னாலஜிகளால் பார்ப்பவர்கள் வியக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டரை இயக்குனர் சீமான் அவர்கள் வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.
விரைவில் "உயில் ...
ஹர ஹர மஹாதேவகி” கூட்டணி மீண்டும் இணையும் இருட்டு அறையில் முரட்டு குத்து பட பூஜை
ஹர ஹர மஹாதேவகி" கூட்டணி மீண்டும் இணையும் இருட்டு அறையில் முரட்டு குத்து
ப்ளு கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் K E ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும் புதிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இதில் கௌதம் கார்த்திக், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சன்தோஷ் பி ஜெயகுமார். இப்படத்திற்கு தருண் பாலாஜி ஒளிப்பதிவை மேற்கொள்ள, இசையமைப்பாளர் பாலமுரளி பாலா இசையமைக்கிறார். பிரசன்னா G K படத் தொகுப்பை கவனிக்க, சுப்ரமணிய சுரேஷ் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்றிருக்கிறார்.
இப்படத்தைப் பற்றி இயக்குநர் சன்தோஷ் பி ஜெயக்குமார் பேசும் போது,‘ இது ஒரு அடல்ட் ஹாரர் காமெடி ஜேனரில் உருவாகும் படம். இப்படத்தின் படபிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் நடைபெறுகிறது. நாயகியாக நடிப்பதற்கு முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைப...
தயாரிப்பாளர் ஆகும் சின்னத்திரை நடிகை..!
தேவர் மகன் படத்தில் நாசர் மகளாக குழந்தை நட்சத்திரமாக கால் பதித்தவர் நீலிமா.
அதை தொடர்ந்து நான் மகான் அல்ல, முரண், திமிரு, சந்தோஷ் சுப்ரமண்யம், மொழி பண்ணையாரும் பத்மினியும், சத்ரு, மன்னர் வகையறா உட்பட 50கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் நீலிமா.
அத்துடன் வாணி ராணி, தாமரை, தலையனை பூக்கள் உட்பட80க்கும் மேற்பட்ட தொலைகாட்சி தொடர்களிலும் நடித்திருப்பவர் நீலிமா.
தனது 20 வருட கலைப்பயணத்தின் தொடர்ச்சியாகவும் தனது அடுத்த கட்ட முயற்சியாகவும் இசை பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.
இந்த நிறுவனம் zee தமிழ் தொலைகாட்சிக்காக தயாரிக்கும் நெடுந்தொடர் "நிறம் மாறாத பூக்கள்"
முரளி, நிஷ்மா, அஸ்மிதா மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கெளதமி ரவி டேவிட் ராஜ்,தாரிஷ், நேகா, ஸ்ரீநிஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
வரும் திங்கள் முதல் வெள்ளி வரை ...




