வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

”கொம்பு வச்ச சிங்கம்டா” படத்திற்கு தீவிரம் காட்டும் சசிகுமார்!

சசிகுமார் நடிப்பில் விரைவில் உருவாக உள்ளது ”கொம்பு வச்ச சிங்கம்டா”. இப்படத்தை ‘சுந்தரபாண்டியன்’ புகழ் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கவுள்ளார்.

மதுரைக்கு அருகேயுள்ள கிராமம் ஒன்றில், இருவது வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படவிருக்கிறது இப்படம். இதனை ‘ரேதன் – தி சினிமா பீப்பிள்’ நிறுவனம் சார்பில் இந்தர் குமார் தயாரிக்கவுள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மகேந்திரன், சூரி, ஹரீஷ் பெராடி நடிக்கவுள்ளனர்.

மேலும், கதாநாயகி மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இன்னொரு ஹீரோவிடமும் பேச்சு வார்த்தை நடைபெறுகிறதாம். தற்போது, படத்தின் ஷூட்டிங்கை வருகிற அக்டோபர் 26-ஆம் தேதி முதல் துவங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இப்படத்தினை ஒரே ஷெடியூலில் முடிக்கத் திட்டமிட்டுள்ளாராம் சசிகுமார். படப்பிடிப்பை காரைக்குடி, தென்காசி மற்றும் பொள்ளாச்சியில் நடத்தவுள்ளனர்.

319 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன