வியாழக்கிழமை, மே 21
Shadow

விஷ்னு மஞ்சுவின் குறள் 388 படத்தின் முதல் பார்வை..!

பரபரப்பை ஏற்படுத்திய விஷ்னு மஞ்சுவின் குறள் 388 படத்தின் முதல் பார்வை . 

விஷ்னு மஞ்சு நடிக்கும் குறள் 388படத்தின் கிளர்ச்சியூட்டும் முதல் பார்வை . 

 

விஷ்னு மஞ்சு நடிக்கும் குறள் 388-ன் முதல் பார்வை நவம்பர் 23,புதன்கிழமை அன்று வெளியானது. படத்தின் கதாநாயகன் விஷ்ணு மஞ்சுவின் பிறந்த நாளை முன்னிட்டு,இப்படத்தின் முதல் பார்வை வெளியானது. ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இப்படித்தின் முதல் பார்வையை விஷ்ணு மஞ்சு  ட்விட்டரில் வெளியிட்டார். பொலிட்டிக்கல் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பார்வை சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், முதல் பார்வையில் பல தலைவர்களின்  படங்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

எம்.ஜி.ஆர், கருணாநிதி,ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் உள்பட பல தேசிய கட்சிகளின் தலைவர்கள் படம் இடம் பெற்றிருந்தது. சமூக வலைதளங்களை கலக்கிய குறள் 388 படத்தை அறிமுக இயக்குனர் GS கார்த்திக் இயக்கியுள்ளார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் டிசம்பர் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

தமிழில் இவன் வேற மாதிரி,வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் நடித்திருந்த சுரபி குறள் 388 – ன் கதாநாயகியாக நடிக்கிறார். தவிர பிரபல நட்சத்திரங்கள் பலரும் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கின்றனர். 

தெலுங்கில் வோட்டர் என்ற தலைப்பில் வெளியாகும் குறள்388, திரு வள்ளுவர் எழுதிய குறளில் 388 வது குறளின் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. 

தேர்தலின் போது போலியான வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலுக்குப் பின் அதை மறந்து விடும் போலியான அரசியல் வாதிகளின் முகத்திரைகளை தோலுரிக்கும் கதையே குறள் 388படத்தின் கதையாகும்.  

விஷ்னு மஞ்சுவிற்கு குறள் 388,தமிழில் நல்ல ஒரு அறிமுகபடமாக அமையும் என்று படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.  தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

453 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன