
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக ஆல்பம் பாடல்கள் உருவாகி வருகிறது. இந்த ஆல்பம் சாங் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்து வருவதால், பல முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள் ஆல்பம் சாங் உருவாக்கும் முயற்சியில் இறங்கி வருகிறார்கள்.

பெரும்பாலான ஆல்பம் பாடல்கள் காதல், நடனம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஜடா படம் மூலம் இயக்குனராக பலருடைய கவனத்தை ஈர்த்த இயக்குனர் குமரன், ‘பறை’ என்னும் ஆல்பம் பாடலை உருவாக்கி இருக்கிறார். இந்த பறை வழக்கமான ஆல்பம் பாடல்களை தாண்டி, உண்மை கதையை சமுதாயத்தில் பலரும் கவனிக்கப்பட்ட வாழ்வில் மறக்கமுடியாத ஒன்றை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் குமரன்.
1,651 Views
