அதிரடி ஆக்ஷனில் ‘சி3’
சூர்யா நடிப்பில் ஏற்கனவே சிங்கம், சிங்கம்2 படங்கள் ரிலீஸ் ஆகி வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், ரசிகர்கள், தயாரிப்பாளர் என எல்லா தரப்பு மக்களையும் ஏமாற்றாமல் வசூல் தந்து வரவேற்பை பெற்றிருந்தது.
ஹரி இயக்கத்தில் மீண்டும் சி3 என சிங்கம் படத்தின் அடுத்த பாகமாக சூர்யா நடிப்பில் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு ரெடியாகியுள்ளது.
ஜல்லிக்கட்டு வேண்டும் என மாணவர் போராட்டம் காரணமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பட ரிலீஸ் தள்ளிப்போனது. இப்போது பிப்ரவரி முதல்வாரத்தில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
முந்தைய சிங்கம், சிங்கம்2 படங்களை மிஞ்சும் வகையில் ஆக்ஷனிலும், அதிரடி காட்சிகளிலும் சி3 பிரமாண்டமாக இருக்கும் என்கிறது தயாரிப்பு தரப்பு.
உலகம் முழுவதும் மிக அதிக திரையரங்குளில் ஒரே நாளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே, ஜல்லிகட்டு போராட்டத்தின்போது போலீசுக்கும் மாணவர்களுக்கும் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளால் போலீஸ் மீது கசப்புடன் இருக்கும் நேரத்தில் இந்த படம் ரிலீஸ் ஆவதால் மாணவர்களோடு தமிழக போலீசும் ரொம்பவே ஆவலோடு இருக்கிறார்கள்.
நேர்மையான போலீசாக சூர்யா நடிக்கும் ‘சி3’ ரசிகர்களை கவருமா…!
