சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

Tag: திருமாவளவன்

முள்ளிவாய்கால் பேரவலம்… விடுதலை களமே விடியலை படைக்கும் – திருமாவளவன் அறிக்கை

முள்ளிவாய்கால் பேரவலம்… விடுதலை களமே விடியலை படைக்கும் – திருமாவளவன் அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முள்ளிவாய்க்கால் பேரவலம்! சர்வதேச சமூகத்தின் நல்லாதரவை வென்றெடுப்போம் ! விடுதலைச் சிறுத்தைகள் அறிக்கை. மே-18, ஈழமண்ணில் இனவழிப்புக் கொடூரம் நடந்தேறிய நாள். “யுத்தம் முடிந்தது; விடுதலைப்புலிகள் அழிந்தனர்” என்று இராஜபக்‌ஷே தலைமையிலான சிங்கள இனவெறி கும்பல் கொக்கரித்த நாள். பத்தாண்டுகள் உருண்டோடி விட்டன. ஈழத்தமிழர் வாழ்வில் இன்னும் வெளிச்சக் கீற்று வெளிப்படவில்லை. இனக்கொலை மற்றும் போர்க்குற்றம் இழைத்த இராஜபக்சே கும்பல் இன்னும் விசாரிக்கப்படவும் தண்டிக்கப்படவும் இல்லை. மேலும் எஞ்சியுள்ள தமிழருக்கு மறுவாழ்வளிக்கவும் அவர்களின் வாழ்வாதாரங்களுக்கான மறுகட்டமைப்பைச் செய்யவும் ஆளுங்கும்பல் எந்த முனைப்பையும் பெரிதாக மேற்கொள்ளவில்லை. தமிழர் காணிகள் யாவும் சிங்கள இராணுவத்தினருக்கென ஆக்கிரமிப்புக்குள்ளாகி பெருமளவில் இராணுவமயமாகி வருகிறது. இராணுவக் குடும்பத்தினர் புலப்பெயர்...
ஆட்சி முடியும் போது அவசர கதியில் தமிழகத்தை சுடுகாடாக்க வேதாந்தாவுக்கு அனுமதி கொடுக்கும் மோடி அரசு… – திருமா எச்சரிக்கை

ஆட்சி முடியும் போது அவசர கதியில் தமிழகத்தை சுடுகாடாக்க வேதாந்தாவுக்கு அனுமதி கொடுக்கும் மோடி அரசு… – திருமா எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆட்சி முடியும் போது அவசர கதியில் தமிழகத்தை சுடுகாடாக்க வேதாந்தாவுக்கு அனுமதி கொடுக்கும் மோடி அரசு... - திருமா எச்சரிக்கை வி.சி.க. தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:   புதுச்சேரி விழுப்புரம் பகுதிகளில் கடலிலும் நிலத்திலும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனத்துக்கு உரிமம் அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது அதை உடனே ரத்து செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். கிழக்குக் கடற்கரைப் பகுதியில் குமரியில் இருந்து காஞ்சிபுரம் வரை கடலிலும் நிலத்திலும் நூற்றுக் கணக்கான எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டி ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அவசரம் அவசரமாக உரிமங்களை வழங்கி வருகிறது. டெல்டா மாவட்டங்களில் அம்பானிக்கு அதிக அளவில் உரிமங்கள் வழங்கப் பட்டுள்ளன. தற்போது புதுச்சேரி வி...
விடுதலை சிறுத்தைகள் மாநாட்டுக்கு வரும்படி ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த திருமாவளவன்..!

விடுதலை சிறுத்தைகள் மாநாட்டுக்கு வரும்படி ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த திருமாவளவன்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் நடத்தும் தேசம் காப்போம் மாநாட்டில் கலந்து கொள்ள ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த திருமாவளவன்..! மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவின் பதவிக்காலம் வருகின்ற மே மாதத்துடன் நிறைவடைகிறது. அதற்குள் நாடாளுமன்ற தேர்தலை நடத்தி முடித்திட வேண்டும் என்பதால், அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே, இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு நிற்கின்றன. அந்த அணியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு போன்ற தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், வருகின்ற ஜனவரி 23-ம் தேதியன்று திருச்சியில் ‘தேசம் காப்போம்’ என்ற மாநாட்டை நடத்துகின்றனர். அந்த மாநாட்டில் பங்கேற்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து அக்கட்...