அரை வாளி தண்ணீருக்கு அரை மணி நேரம் காத்திருந்தேன் – தண்ணீர் பிரச்சினையை பொது மேடையில் பேசிய எஸ்.பி.பி.
அரை வாளி தண்ணீருக்கு அரை மணி நேரம் காத்திருந்தேன் - தண்ணீர் பிரச்சினையை பொது மேடையில் பேசிய எஸ்.பி.பி.
யோகிபாபு நடிப்பில் வெளியாக இருக்கும் ‘கூர்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பேசியதாவது:-
‘தங்கம், பிளாட்டினத்தை விட தண்ணீர் மிகவும் விலை உயர்ந்தது. தண்ணீர் பற்றாக்குறை தற்போது அதிக அளவில் உள்ளது. அதற்கு காரணம் நாம் தான். இப்போதாவது தண்ணீர் சேகரிப்பது தொடர்பாக நல்ல விஷயங்களை நாம் செய்ய முயற்சி செய்ய வேண்டும்.
தண்ணீரை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். சின்ன சின்ன பயன்படுத்தும் முறைகள் உள்ளன.
அவற்றை அன்றாடம் நாம் பயன் படுத்தினால் போதும். நம் தட்டில் சாப்பிடுவதை விட வாழை இலையில் சாப்பிடலாம். அதனால் தண்ணீர் மிச்சமாக வாய்ப்புள்ளது.
தினமும் வெவ்வேறு ஆடைகளை பயன்படுத...

