கொரானா பாதிப்பால் அடுத்த 3 மாதங்களுக்கு வங்கிகளில் வாங்கிய கடனை கட்டுவதில் விலக்கு – ஆர்.பி.ஐ அறிவிப்பு
கொரானா பாதிப்பால் அடுத்த 3 மாதங்களுக்கு வங்கிகளில் வாங்கிய கடனை கட்டுவதில் விலக்கு - ஆர்.பி.ஐ அறிவிப்பு
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக பொதுமக்கள் தொடங்கி கூலித் தொழிலாளர்கள், தனியார் துறை ஊழியர்கள் என பல தரப்பினரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.
அனைத்து தொழில் துறைகளும் முடங்கி இருக்கின்றன. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிதி சலுகைகளை அளித்து வருகின்றன.
மாத தொடக்கம் நெருங்கி வரும் சூழலில் வங்கி கடன் தவணைகள் மக்களை பெரிதும் அச்சப்படுத்தியது. அதோடு வங்கி கடன் தவணையில் ஏதாவது சலுகைகள் அறிவிக்க வேண்டும் என பலதரப்பிலும் கோரிக்கைகள் எழுந்தது.
இந்நிலையில், செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித...
