கேரளாவில் டீ கடையில் குண்டு வெடிப்பு: 2 பேர் உயிருக்கு போராட்டம் -போலீசார் விசாரணை!
கேரளாவில் டீ கடையில் குண்டு வெடிப்பு: 2 பேர் உயிருக்கு போராட்டம் -போலீசார் விசாரணை!
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே பிடனபிலவு அனிகாடு பகுதியில் பஷீர் என்பவர் டீ கடை நடத்தி வருகிறார்.
பஷீர் நேற்று வழக்கம் போல் டீ கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது கடையில் சில வாடிக்கையாளர்கள் வந்தனர். அவர்கள் கடையின் உள்பகுதியில் அமர்ந்து டீ குடித்தனர்.
திடீரென கடையில் குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டது. கடையில் இருந்த பொருட்கள் சிதறி விழுந்தன, மேலும் கடை முழுவதும் குபுகுபு வென கரும்புகை சூழ்ந்தது. மேலும் கடையும் தீப்பற்றி எரிந்தது.
இதில் கடையில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்து அலறினர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் இச்சம்பவம் பற்றி கீழ வைப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கிருந்து போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் கட...
