தங்க கடத்தலில் கிடைத்த பணத்தில் சினிமாவுக்கு பைனான்ஸ் செய்த ஸ்வப்னா!
தங்க கடத்தலில் கிடைத்த பணத்தில் சினிமாவுக்கு பைனான்ஸ் செய்த ஸ்வப்னா!
கேரளாவை உலுக்கி வரும் தங்க கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஸ்ப்னா தங்க கடத்தல் பணத்தில் மலையாள சினிமா படங்களுக்கு பைனானஸ் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
தங்கம் கடத்தலில் சிக்கிய ஸ்வப்னாதான் இப்போது கேரளாவில் ஹாட் டாபிக். நடிகை கடத்தலில் தொடங்கி சொந்த தம்பியை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியது வரை தோண்ட தோண்ட பூதம் புறப்படுகிறது. அது மட்டுமல்ல இப்போது சினிமாவிற்கும் பினாமியாக பைனான்ஸ் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
கேரளத்தில் தங்கம் கடத்தப்பட்டது தொடா்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயா் ஆகியோருக்கான என்ஐஏ காவல் வரும் 24-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கில் இருவருக்கும் விதிக்கப்பட்டிருந்த 8 நாள் என்ஐஏ காவலா் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது....
