பொன்னியின் செல்வன் திரையில் காட்ட நான் புறப்படுகிறேன் – சவுந்தர்யா விசாகன் அறிவிப்பு
பொன்னியின் செல்வன் வெப் சீரிஸூக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளரான சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் நாவல் கல்கி அவர்களால் எழுதப்பட்டு 70 ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழில் அதிகமாக் விற்பனையான நாவல் பட்டியலில் கண்டிப்பாக பொன்னியின் செல்வன் முதலிடத்தில் இருக்கும். இப்போது கூட பொன்னியின் செல்வன் புத்தகக் கண்காட்சிகளில் பெஸ்ட் செல்லராக இருந்து வருகிறது.
இந்த நாவலைப் படமாக்க எம்.ஜி.ஆர், கமல்ஹாசன், செல்வராகவன் என பலரும் முயற்சி செய்து ஏனோ தொடங்காமலேயே கை விட்டார்கள்.
இதில் மணிரத்னம் பலமுறை முயற்சி செய்து இப்போது ஒரு வழியாக பெரிய நிறுவனத்தோடு இணைந்திருக்கிறார்.
ஆனால் பிரம்மாண்டம் காரணமாக தள்ளிக்கொண்டே போனது. இப்போது இறுதியாக படமாக எடுக்க மணிரத்னம் களத்தில் இறங்கியுள்ளார்.
பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகாவுடன் இணைந்து பல நூறு கோடி செலவி...
