ஏப்ரல் 1 முதல் உயர்கிறது சுங்கச்சாவடி கட்டணம்!
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் வருகிற 1-ந்தேதி முதல் வாகனங்களுக்கான சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
சென்னையில் வானகரம், சூரப்பட்டு ஆகிய இடங்களில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது.
இந்த 2 சுங்கச்சாவடிகளையும் அகற்ற வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் இந்த 2 சுங்கச்சாவடிகளும் இன்னும் அகற்றப்படவில்லை.
அதே நேரத்தில் இந்த 2 சுங்கச்சாவடிகளிலும் வருகிற 1-ந் தேதி முதல் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது.
அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டரை பெரும்புதூர், நல்லூர் ஆகிய இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன.
இந்த சுங்கச்சாவடிகளிலும் வருகிற 1-ந்தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது.
கார், ஜீப், வேன் மற்றும் இலகுரக வாகனங்கள் ஒரு முறை செல்ல இதுவரை ரூ.30 கட்டணம் இருந்தது.
அது குறைந்தபட்சமாக ரூ.5 உயர்த்தப்பட்டு ரூ.35...
