வேன் மீது ஏறி நின்று ரசிகர்களை பார்த்தபடி செல்பி எடுத்த விஜய்!
வேன் மீது ஏறி நின்று ரசிகர்களை பார்த்தபடி செல்பி எடுத்த விஜய்!
வருமானவரித் துறை சோதனைக்கு பின்னர் விஜய் தனது மாஸ்டர் ஷூட்டிங்கில் வழக்கம் போல கலந்து கொண்டார்.
விஜய்யை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நெய்வேலி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் நடிகர் விஜய் தனது ரசிகர்களை சந்திக்க ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யூனிட் வேன் மீது ஏறி ரசிகர்களை நோக்கி கை அசைத்தார்.
அப்போது ரசிகர்கள் விஜய்யை வாழ்த்தி கோஷம் போட்டனர்.
ஒரு கட்டத்தில் தனது செல் போன் மூலம் ரசிகர்களை பார்த்தபடி செல்பி எடுத்தார் விஜய்.
ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் விஜய் அருகில் வர ரசிகர்கள் முண்டியடித்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் ரசிகர்களை விலக்கி விஜய் கார் வெளியே செல்ல வழி ஏற்படுத்தினர்....
