தேர்தல் முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு!
தேர்தல் முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு!
சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் நேற்று வழக்குகளை விசாரித்தனர். அப்போது வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம் ஆஜராகி, ‘தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும். லட்சக்கணக்கான மக்கள் தினமும் டாஸ்மாக் கடைகளுக்கும், பார்களுக்கும் வருவதால் வைரஸ் தொற்று பரவும் இடங்களாக அவை திகழ்ந்து வருகின்றன. இது தொடர்பாக நான் தாக்கல் செய்ய உள்ள வழக்கை அவசர வழக்காக உடனே விசாரிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்
அதற்கு நீதிபதிகள், மனு தாக்கல் செய்தால், விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறோம் என்று கூறினர்.
இதையடுத்து சூரியபிரகாசம் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
பொதுமக்கள் எந்த ...
