கொரானா விவகாரம் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு கோர்ட் சரமாரி கேள்வி!
தனியார் மருத்துவமனைகளுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி
மதுரையில் மாரடைப்பு ஏற்படும் நோயாளிகளை கூட, தனியார் மருத்துவமனைகள் அனுமதிக்க மறுப்பது ஏன் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
"கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கிற்கு 15 ஆயிரம் வரை கேட்டு நிர்பந்தம் செய்யப்படுவதாக தகவல் வருகிறதே?" என்றும் கேட்டுள்ளது.
"கொரானாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய பணம் கேட்பதாக தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்", என்று உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது
மதுரை கொரானா தடுப்பு சிறப்பு அதிகாரி நிலை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரையில் கொரோனா பரவல் தொடர்பாக தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கில் நீதிமன்றம் இந்த அதிரடிகளை அரங்கேற்றியுள்ளது....
