கொரானா பரவல்… விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடைவிதித்த தமிழக அரசு!
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடைவிதித்த தமிழக அரசு.
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபட அனுமதியில்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இது தொடர்பாக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக கட்டுப்பாடு நடவடிக்கைகள் மாநிலமெங்கும் அமலில் உள்ளதால், விநாயகர் சிலைகளை சாலைகளில் வைத்து வழிபட அனுமதி இல்லை என்று கூறியுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழாவில் தமிழ்நாடு முழுவதும் 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் புரிகிறது நிலையில் அரசின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசின் உத்தரவை எதிர்த்து இந்து அமைப்புகள் நீதிமன்றத்துக்கு செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது....
