தலைமை அர்ச்சகர் ஊழியர்கள் என 140 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டபின்னும் திருப்பதியில் தரிசனத்தை நிறுத்தும் திட்டமில்லையாம்!
முக்கிய அர்ச்சகர்கள் ஊழியர்கள் என வைரஸ் பாதிப்பு 140 ஆன போதும் தரிசனத்தை நிறுத்தும் திட்டமில்லை - திருப்பதி தேவஸ்தானம்
கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டது.
அதன்பின் பல மாதங்களுக்கு பின் படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, ஜூன் மாத இடையே பக்தர்கள் தரிசனத்திற்காக திருப்பதி கோவில் மீண்டும் திறக்கப்பட்டது.
திருப்பதி கோயிலில் பிரதான தலைமை அர்ச்சகர் உட்பட 14 அர்ச்சகர்கள் என 140 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பதி கோவில் தரிசனத்தை நிறுத்த வேண்டும் என்று தலைமை அர்ச்சகர் ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த நிலையில், திருப்பதியில் தரி...
