புதன்கிழமை, ஜூலை 29
Shadow

Tag: திருமா வேதனை

பிரதமரின் 20 லட்சம் கோடி வெற்று உரைக்கு நிதியமைச்சர் விளக்கவுரை…- விடுதலை சிறுத்தைகள் கருத்து

பிரதமரின் 20 லட்சம் கோடி வெற்று உரைக்கு நிதியமைச்சர் விளக்கவுரை…- விடுதலை சிறுத்தைகள் கருத்து

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *வெற்று உரைக்கு விளக்கவுரை எழுதியிருக்கிறார்!* *நிதியமைச்சரின் அறிவிப்புகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருத்து!* பிரதமர்  தனது உரையில் 20 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணத் திட்டங்களை அறிவிப்பதாகவும் அதன் விவரங்களை நிதியமைச்சர் வெளியிடுவார் என்றும் கூறியிருந்தார். அதனால் நாடே நிதியமைச்சரின் அறிவிப்புகளை எதிர்பார்த்துக் காத்திருந்தது. இந்நிலையில் சிறு குறு தொழில்கள் தொடர்பான அறிவிப்புகளை இன்று நிதியமைச்சர் வெளியிட்டிருக்கிறார். பிற அறிவிப்புகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். இந்த அறிவிப்புகள் எவையும் உடனடியாக மக்களுக்குப் பயன் அளிக்கக் கூடியவையாக இல்லை. பிரதமரின் வழக்கமான வெற்று உரைக்கு விளக்க உரையாக அமைந்துள்ளதே தவிர வேறேதும் இல்லை என்பதை வேதனையோடு தெரிவித்துக் கொள்கிறோம். சிறு குறு தொழிற்சாலைகளில் வகைப்பாடு மாற்றி அமைக்கப்பட்டிருக்கிற...
ஊரடங்கில் மத்திய,மாநில அரசுகளிடம் தெளிவான திட்டம் இல்லை – திருமாவளவன் வேதனை

ஊரடங்கில் மத்திய,மாநில அரசுகளிடம் தெளிவான திட்டம் இல்லை – திருமாவளவன் வேதனை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  விடுதலைக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கொரானா தொற்றுப் பரவாமல் தடுப்பதற்கு முழு அடைப்பு என்ற அணுகுமுறை ஓரளவுக்குப் பயன்பட்டு இருக்கிறது என்றாலும் இதுவரையிலான முழு அடைப்பு காலத்தை உரிய விதத்தில் மத்திய-மாநில அரசுகள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதி விரைவு சோதனைகள் செய்யவும்; நோயால் பாதிக்கப்படுபவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான சுகாதார கட்டமைப்பு வசதிகளைப் போதுமான அளவில் ஏற்படுத்திக் கொள்ளவும்; மருத்துவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் உரிய பாதுகாப்புக் கருவிகளை தருவித்துக் கொள்வதற்கும் இந்த முழு அடைப்பு காலத்தை மத்திய அரசும், தமிழக அரசும் உரிய விதத்தில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் தான் மக்கள் எவ்வளவு கட்டுப்பாடு காத்தும் நோய்த் தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையை இவர்களால் மட்டுப்படுத்த முடியவில்லை. எதிர்வர...