வெள்ளிக்கிழமை, ஜூலை 31
Shadow

Tag: பயங்கரவாதிகள்

பாகிஸ்தான் கொடியுடன் சுற்றி திரிந்த மூன்று பயங்கரவாதிகள் கைது- பாதுகாப்பு படையினர் நடவடிக்கை!

பாகிஸ்தான் கொடியுடன் சுற்றி திரிந்த மூன்று பயங்கரவாதிகள் கைது- பாதுகாப்பு படையினர் நடவடிக்கை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் குறித்த தேடுதல் வேட்டையில் மாநில காவல்துறையினர், ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினருடன் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நடத்திய சோதனையின் போது ​​கோரிபுராவில் இருந்து போமை பகுதி நோக்கி வந்த மூன்று சந்தேகத்திற்குரிய நபர்களை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர், இருப்பினும், பாதுகாப்புப் படையினர் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையின் போது அவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஷாரிக் அஷ்ரப், சக்லைன் முஷ்டாக் மற்றும் தவ்பீக் ஹசன் ஷேக் என அடையாளம் காணப்பட்டனர். மேலும் நடத்தப்பட்ட சோதனையில், பயங்கரவாதிகள் வைத்திருந்த பாகிஸ்தான் கொடிகள், மூன்று கை எறிக்குண்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்புப...
நாகாலாந்தில் பதற்றம்: பயங்கரவாதிகள் என நினைத்து 13 பேர் சுட்டுக்கொலை- உயர்மட்ட விசாரைணக்கு உத்தரவு!

நாகாலாந்தில் பதற்றம்: பயங்கரவாதிகள் என நினைத்து 13 பேர் சுட்டுக்கொலை- உயர்மட்ட விசாரைணக்கு உத்தரவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நாகாலாந்தில் பதற்றம்: பயங்கரவாதிகள் என நினைத்து 13 பேர் சுட்டுக்கொலை- உயர்மட்ட விசாரைணக்கு உத்தரவு! நாகாலாந்து மாநிலத்தின் மோன் என்ற மாவட்டத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக அசாம் ரைபிள் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் நேற்று மாலை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, 13 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் குறித்து விசாரணை நடத்தும்போது, சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பொதுமக்கள் என்று பின்னர் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், " பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட அனைவரும் 15 கி.மீ. தொலைவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்து வந்த கூலித் தொழிலாளர்கள். இவர்கள், ஒவ்வொரு சனிக்கிழமையும் வேனில் ஊருக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். அப்போது இவர்கள் ஊருக்கு...