பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல்- வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை!
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது.
இன்று (செவ்வாய்க்கிழமை) பாராளுமன்றத்தில் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்) மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் ஆகும்.
முன்னதாக இன்று காலை 9 மணிக்கு நிர்மலா சீதாராமன் தனது நிதி அமைச்சக மூத்த அதிகாரிகளுடன் பட்ஜெட் தாக்கல் செய்ய புறப்பட்டார். முதலில் அவர் குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்று ஜனாதிபதியை சந்தித்துப் பேசினார்.
பிறகு பாராளுமன்றத்துக்கு புறப்பட்டு வந்தார். அங்கு பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
11 மணிக்கு பாராளுமன்ற மக்களவையில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அனைவரும் எதிர்பார்த்தது போன்று பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில...
