செப்.1ம் தேதி முதல் ஓடத்தயாராக உள்ள மெட்ரோ ரயில்… AC கட் செய்வார்களா?
கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் சேவைகள் மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படலாம் என்றும், புதிய வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது. இந்த நிலையில் மாநில அரசிடம் இருந்து எப்போது அனுமதி கிடைத்தாலும் ரெயில்களை இயக்க தயார் நிலையில் இருப்பதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
அரசு உத்தரவு வந்தால் செப்டம்பர் 1-ந்தேதி முதல் மெட்ரோ ரெயில்களை இயக்குவதற்கு தயாராக இருக்கிறோம். மெட்ரோ ரெயில்கள் தயார் நிலையில் உள்ளன. பயணிகளை பாதுகாப்பான முறையில் கையாள்வதற்காக சமூக இடைவெளியை பயணிகள் கடைப்பிடிக்கும் வகையில் ரெயில் நிலைய நுழைவு வாயிலில் இருந்து நகரும் படிக்கட்டுகள், டிக்கெட் கவுண்ட்டர்கள், பிளாட்பாரங்கள் உள்...

