ஆதாயம் கிடைக்காததால் தங்க தமிழ்ச் செல்வன் மன நோயாளியாகி விட்டார் – தினகரன் ஆதவாளர் வெற்றிவேல் கடும் தாக்கு
ஆதாயம் கிடைக்காததால் தங்க தமிழ்ச் செல்வன் மன நோயாளியாகி விட்டார் - தினகரன் ஆதவாளர் வெற்றிவேல் கடும் தாக்கு
தினகரன் மீது குற்றம் சாட்டிய தங்க தமிழ்ச்செல்வனுக்கு அ.ம.மு.க.வை சேர்ந்த வெற்றிவேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
தங்க தமிழ்ச்செல்வன் பலமுறை தான்தோன்றித்தனமாக பேசுவது வாடிக்கை. 2009-ல் அவர் அம்மாவையே எதிர்த்து பேசியவர்தான். அவரை அம்மா கூப்பிட்டு எச்சரித்தார். இவர் திடீரென்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல செயல் படுவார். அவ்வப்போது அவரது மூடுக்கு ஏற்ப இருப்பார். இரவு வந்து விட்டால் சொல்ல வேண்டியதில்லை. வேறுமாதிரி இருப்பார். ஆடியோவில் இருப்பது போல் தான் பேசுவார்.
அவர் 18 எம்.எல்.ஏ.க்களில் ஒருவர். அம்மா அறிவித்த மாவட்ட செயலாளராக இருந்து எங்கள் கூட வந்தவர். அவரிடம் நானே பலமுறை எச்சரிக்கை செய்து பேசியுள்ளேன். திருப்பரங்குன்றத்தில் தி.மு.க. வுடன் சேர்ந்...
