ஹெலிகாப்டரில் தொங்கி ஸ்டண்ட் செய்த பாலிவுட் பிரபலம்…!
ஹெலிகாப்டரில் தொங்கி ஸ்டண்ட் செய்த பாலிவுட் பிரபலம்...!
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இப்போது “சூர்யவன்ஷி” என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை இயக்கி கொண்டிருப்பவர் பாலிவுட்டின் வெற்றி இயக்குனர் ரோஹித் ஷெட்டி.
”சூர்யவன்ஷி” படத்தின் படபிடிப்பு தீவிரமாக சென்றுகொண்டு இருக்கும் நிலையில் நடிகர் அக்ஷய் குமார்,அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
ஹெலிகாப்டரின் கீழே உள்ள கம்பியில் அக்ஷய் குமார் தலை கீழாக தொங்கி கொண்டு தரைக்கு கொஞ்சம் உயரத்தில் ஹெலிகாப்டர் பறப்பது போல அந்த படம் உள்ளது.
இதையாரும் முயற்சிக்க வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார். இந்த படம் வைரலாகி வருகிறது....
