இந்த சூழலில்கூட சந்தர்ப்பவாத அரசியல் செய்து இரட்டை வேடம் போடுகிறார் ஸ்டாலின் – முதல்வர் பழனிச்சாமி காட்டமான பதில்
கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் தன்னலமற்று பணியாற்றுகிறவர்களை கொச்சைப்படுத்தும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் - முதல்வர் பழனிச்சாமி பதில் அறிக்கை
கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு மெத்தனமாக இருப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதி இருந்தார்.
அதற்கு முதல்வர் பழனிச்சாமி பதில் அளித்து அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் கொரானா வைரஸ் நோய்த் தொற்று முதன் முதலாக கேரளாவில் வந்தபோதே, அ.தி.மு.க. அரசு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகின்றது. நோய்த் தொற்று சம்பந்தமாக நாள்தோறும் நடைபெறும் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் புள்ளி விவரங்கள் எந்தவித ஒளிவுமறைவும் இன்றி வெளியிடப்பட்டு வருகின்றது.
அது மட்டுமல்லாமல், மூத்த அதிகாரிகள் த...
