தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் வசூலித்த அபராத தொகை ரூ.16 கோடியை தாண்டியது!
*ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் 98 நாட்களில் 7,77,601 பேரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர். போக்குவரத்து போலீசார் அபராதமாக ரூ. 16கோடியே 42 லட்சத்து 16 ஆயிரத்தி105 ரூபாய் வசூலித்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது*
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது
மக்கள் யாரும் அவசியம் இன்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.குறிப்பாக சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளடக்கிய சென்னை காவல்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது தடை உத்தரவை மீறுபவர்களை கண்காணித்து தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. போலீசார் தடை உத்தரவை மீறும் இளைஞர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து அவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமுலுக்...