தோல்வியால் ஆத்திரம்… பார்லிமெண்ட்டில் வன்முறையை கட்டவிழ்த்த ராஜபக்சே ஆதரவாளர்கள்!
இலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் கரு.ஜெயசூர்யா மீது ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள் தாக்குதல் முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கை நாடாளுமன்றம் நேற்று கூடியதும் ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே தரப்பினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர், அதில் ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தோல்வியடைந்தார். எனவே, ரணில் விக்ரமசிங்கே தரப்பு கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அறிவித்தார். இதனால் ராஜபக்சே தனது பிரதமர் பதவியை இழந்தார்.
இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை இன்று மீண்டும் சமர்பிப்பதாகவும், அதன் மீது வாக்கெடுப்பு நடத்தும்படியும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
அப...