துல்கரிடம் மன்னிப்பு கேட்டு வாண்டடாக சர்ச்சை வண்டியில் ஏறிய பிரசன்னா!
நாயின் பேர் சர்ச்சை மன்னிப்பு கேட்ட துல்கரிடம் மன்னிப்பு கேட்டு வாண்டடாக சர்ச்சை வண்டியில் ஏறிய பிரசன்னா!
அனுப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து தயாரித்துள்ள ‘வரனே அவஷ்யமுண்டு’ என்ற மலையாள படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது. இதில் துல்கர் சல்மானுடன், ஷோபனா, சுரேஷ் கோபி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோரும் நடித்து இருந்தனர். இந்த படம் தற்போது இணையதளத்திலும் வந்துள்ளது.
இந்த படத்தில் இடம்பெறும் நகைச்சுவை காட்சி ஒன்றில், சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்து அழைப்பர். இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் துல்கர் சல்மான் உள்ளிட்ட படக்குழுவினரை இணையத்தில் தீட்டித் தீர்த்தனர்.
போதா குறைக்கு சீமான் ஒருபடி மேலே போய் தனது வழக்கமான அறிக்கை மூலம் துல்கரை காய்ச்சி எடுத்தார்.
இதனால் மிகுந்த மன உளைச்...