அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால்… விலைவாசியை இஷ்டத்துக்கு உயர்த்தினால் 7 ஆண்டு ஜெயில் – மத்திய அரசு உத்தரவு
அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால்... விலைவாசியை இஷ்டத்துக்கு உயர்த்தினால் 7 ஆண்டு ஜெயில் - மத்திய அரசு உத்தரவு
கொரானா காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
இது குறித்து பல மாநிலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சியினரால் எழுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து மத்திய அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இதுகுறித்து அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஊரடங்கு காலத்தில், உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் உற்பத்திக்கும், எடுத்துச் செல்வதற்கும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்து இரு...