கார் பரிசு வாங்கிய காளை… 3வது ஆண்டாக காளைகளை அடக்கிய வாலிபருக்கு பைக்… களை கட்டிய பாலமேடு ஜல்லிக்கட்டு!
கார் பரிசு வாங்கிய காளை... 3வது ஆண்டாக காளைகளை அடக்கிய வாலிபருக்கு பைக்... களை கட்டிய பாலமேடு ஜல்லிக்கட்டு!
பாலமேடு ஜல்லிக்கட்டில் தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிக காளைகளை அடக்கி சிறந்த வீரருக்கான விருதை பிரபாகரன் பெற்றுள்ளார்.
மதுரை பலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. 'சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போட்டிக்காக 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாடிவாசல் தயார் செய்யப்பட்டு, அதில் 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் களம் கண்டனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
போட்டி தொடங்கும் முன்பாக மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வீரர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டு விழாவில் பங்கேற்று சிறப்பாக விளையாடினர். பாரம்பரிய வழக்கப்படி முதலாவதாக காளையாக பாலமேடு கோயில் காளை அவிழ்க்கப்பட்டது.
காலை 8 மணிக்கு ...

