ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: Asani Storm

ஆந்திராவில் பலத்த மழை- 1000 ஏக்கர் பயிர்கள் சேதம்!

ஆந்திராவில் பலத்த மழை- 1000 ஏக்கர் பயிர்கள் சேதம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடந்த 8ஆம் தேதி புயலாக உருவெடுத்தது. அசானி எனப் பெயரிடப்பட்ட அந்தப் புயல் வடக்கு ஆந்திரம் ஒடிசா கடற்கரையை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகா்ந்து, ஆந்திர கடல் பகுதியில் நிலைகொண்டது. இதனால் ஆந்திர மாநில வட கடலோர மாவட்டங்களில் நேற்று சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. புயல் காரணமாக ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநில கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்களான ஸ்ரீகாகுளம், பபாத்லா, ஓங்கோல் மாவட்டங்களில் கனமழை பெய்தது. திருப்பதி, நெல்லூா் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், ‘அசானி’ புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து மசூலிப்பட்டினம் நா்சாபுரம் இடையே நேற்று இரவு கரையைக் கடந்ததாக ஆந்திர பேரிடா் மேலாண்மை ஆணைய இயக்குநா...
அசானி புயலின் பலத்த காற்றால் நடுக்கடலில் தத்தளித்த 9 மீனவர்கள்!

அசானி புயலின் பலத்த காற்றால் நடுக்கடலில் தத்தளித்த 9 மீனவர்கள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அசானி புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சில இடங்களில் மழை மற்றும் பலத்த காற்று வீசி வருகிறது. நேற்று அதிகபட்சமாக 70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் பல்வேறு இடங்களில் இருந்த தடுப்பு கம்பிகள், விளம்பர பலகைகள் காற்றில் சரிந்து விழுந்தது. தூத்துக்குடி மையவாடி பகுதியில் உள்ள மின்தகன மையத்தில் புகை போக்கி கோபுரம் சரிந்து மின் வயரில் விழுந்ததால் சில மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. மேலும் மரக்கிளைகளும் முறிந்து விழுந்தது. இதே போல் ஆத்தூர், ஆறுமுகநேரி, திருச்செந்தூர், மெஞ்ஞானபுரம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பலத்த காற்று வீசியது. இதனால் அங்குள்ள மின் வயர்கள் அறுந்தது. மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் விசைப்படகு மற்றும் இழுவை படகுகள் மூலம் மீன்பிடிக்க செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டு படகு மீனவர்கள் மட்டும் குறிப்பிட்ட தூரத்திற்கு சென்று ...