முதல்வரை ஒருமையில் கருத்து பதிவிட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
தமிழ் மொழி மற்றும் தமிழக அரசு குறித்து சமூகவலைதளத்தில் அவதூறாக பதிவிட்ட சப்இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
சென்னை பூக்கடை காவல்நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருந்தவர் சேகர்.
சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர், அண்மையில் பதிவிட்ட கருத்து ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரசுப் பணியாளராக இருக்கும் அவர், அரசின் நலத்திட்டங்களையும், தமிழ் மொழியையையும் கடுமையாக விமர்ச்சித்து நண்பர் ஒருவருக்கு பதில் எழுதியிருந்தார்.
அதில், " தமிழ் என்ற காட்டுமிராண்டி மொழியில ஒருத்தன் 5000 ஆயிரம் கொடுக்க சொன்னான். வந்தா அதைக் காணோம். அதைக் கேளுங்கடா என்றால், புரியாத ஹிந்திமொழியில பேசியதை.. ஏதோ புரிஞ்ச மாதிரி... சொல்லாத லட்சத்தை கேட்கிறான் பாருங்க கொத்தடிமை..!" என பதிவிட்டிருந்தார்.
அவரது இந்தப் பதிவு போலீஸ் வட்டாரத்திலும், சமூகவலைதளத்திலும் வைரலாக பரவிய நிலையில்,...