கவர்னர் பன்வாரிலால் புரோகித் உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசினார். கனமழை எச்சரிக்கை, அரசியல் சூழல் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசியதாக கூறப்படுகிறது.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ள நிலையில், அது தொடர்பாகவும், கருணாஸ் விவகாரம் பற்றியும் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....
