ஞாயிற்றுக்கிழமை, மே 12
Shadow

Tag: EB Bill

தமிழகத்தில் கொரானா காலத்தில் அதிகப்படியான மின் கட்டண கொள்ளைக்கு முடிவு வருமா?

தமிழகத்தில் கொரானா காலத்தில் அதிகப்படியான மின் கட்டண கொள்ளைக்கு முடிவு வருமா?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழகத்தில் கொரானா ஊரடங்கால் தொழில் முற்றிலும் முடங்கி உள்ளது. ஆனால் மின் கட்டணம் மட்டும் பல மடங்கு உயர்ந்து வசூலிக்கப்படுவதாக பலரும் புகார் தெரிவித்தனர். இந்த சூழலில் மின் கட்டணத்தை இரண்டு இரண்டு மாதங்களாகத் தனித்தனியாகக் கணக்கிட உத்தரவிட வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடரப்பட்டது. இதில் அரசு விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் வழக்கை ஜூன் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. கொரானா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மின் கணக்கீடு செய்யாததால், வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர், முந்தைய மாதத்திற்குச் செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் எனவும், பின்னர் மின்சாரக் கணக்கீடு செய்யும்போது, இரண்டு இரு மாதங்களுக்கும் சேர்த்து மின்சாரப் பயன்பாடு கணக்கிட்டு, முந்தைய மாதக...