சசிகலா விடுதலையாகும் ஜனவரி 27ந்தேதி ஜெ., நினைவிடத்தை திறக்கும் முதல்வர் எடப்பாடி!
சசிகலா விடுதலையாகும் ஜனவரி 27ந்தேதி ஜெ., நினைவிடத்தை திறக்கும் முதல்வர் எடப்பாடி!
சென்னை மெரினா கடற்கரை வளாகத்தில், எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிடம் வரும் 27ந்தேதி திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. அன்றைய தினம் சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்து வெளியே வருகிறார். அன்றைய நாளில் ஜெ.நினைவிடம் திறக்கப்பட இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவாலயம் அமைக்கப்பட்டு வருகிறது. பீனிக்ஸ் பறவைப்போல அமைக்கப்பட்டு வரும் நினைவாலயம் மற்றும் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, ஜெ.நினைவிடம் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, வரும் 27ந்தேதி அன்று ஜெயலலிதா மெரினா நினைவிடம் திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித...


