வரலட்சுமியின் அடுத்த ஜென்ம ஆசை…
கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்ற அடம் பிடிக்காமல் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தைச் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகை வரலட்சுமி. கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான சர்கார், மாரி 2 போன்ற படங்களை நல்ல வரவேற்பைப் பெற்றன.
ஜே.கே இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராஜ பார்வை’ திரைப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தனது தொழிலை மிகவும் நேசிக்கும் நடிகை வரலட்சுமி, ‘ராஜபார்வை’ திரைப்படத்தில் கம்பீரமான ஐபிஎஸ் அதிகாரி வேடத்தில் இருப்பது போன்ற ஒரு சில நொடி வீடியோ காட்சி பகிர்ந்துள்ளார்.
அடுத்த ஜென்மத்தில் காவல் துறை அதிகாரியாக விரும்புகிறேன். ராஜ பார்வையில் என் பணியை நேசிக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடம் அளிக்கும் எனது இயக்குநர்களுக்கு நன்றி. நான் என்ன செய்தாலும், எப்படி செய்தாலும் அத...
