ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் என்ன?- நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 3 கோணங்களில் விசாரணை!
ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் என்ன?- நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 3 கோணங்களில் விசாரணை!
கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த 8-ந்தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் மையத்திற்கு ராணுவ ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பயணித்தனர்.
இந்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி பூங்கா நஞ்சப்பசத்திரம் பகுதியில் சென்ற போது விபத்துக்குள்ளானது. இதில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேரும் உயிரிழந்தனர்.
விபத்து தொடர்பாக முப்படைகளின் சார்பில் அமைக்கப்பட்ட ஏர்மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையிலான விசாரணை குழுவினர், குன்னூர் வந்து, விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து விபத்தை நேரில் பார்த்தவர்கள், விபத்து நடந்த இடத்திற்கு முதலில் வந்தவர்கள், விபத்து நடப்பதற்கு முன்பு ஹெலிகாப்டரை கடைசியாக செல்போனில் வீடியோ எடுத்தவர்கள்,...
