இந்தியாவில் முதல் முறையாக வாட்டர் டேக்ஸி சேவை!
மும்பை அதிநவீன வாட்டர் டாக்ஸி சேவைகளை இயக்குவதன் மூலம் புதிய போக்குவரத்து தீர்வைப் பெற உள்ளது.
மும்பை நகருக்கும் 30 கிமீ தொலைவில் உள்ள நவி மும்பை பகுதிக்கும் இடையே நீர்வழிப்பாதையில் வாட்டர் டேக்ஸி சேவையை இயக்குவதற்காக திட்டமிடப்பட்டிருந்தது.
நிதின் கட்கரி மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சரான பின்னர் இந்த திட்டம் புத்துயிர் பெற்றது.
இத்திட்டமானது மும்பை துறைமுக கழகம், மகாராஷ்டிரா மேரிடைம் வாரியம், நகர் மற்றும் தொழில்துறை மேம்பாட்டு கழகம் ஆகிய அமைப்புகளுக்கிடையான கூட்டு முயற்சி ஆகும்
முதல் கட்டமாக Ferry Wharfல் உள்நாட்டு குரூஸ் டெர்மினல் (DCT) மற்றும் பல்லார்ட் பகுதியில் உள்ள சர்வதேச குரூஸ் டெர்மினல் (ICT) ஆகிய இரு முனையங்களுக்கு இடையே இந்த வாட்டர் டேக்ஸி சேவை தொடங்க உள்ளது.
மூன்று நிறுவனங்கள் இந்த வாட்டர் டேக்ஸி சேவையை அளிக்க உள்ளன. மேலும் ஒரு நிறுவனம் அ...