7 ஆண்டுக்கு பின் முடிவுக்கு வந்த நிர்பயா வழக்கு… குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடப்பட்டனர்!
7 ஆண்டுக்கு பின் முடிவுக்கு வந்த நிர்பயா வழக்கு... குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடப்பட்டனர்!
டெல்லியில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குமார் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்ஷய் குமார் (31) ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி விசாரணை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் பின்னர் உறுதி செய்தன.
இந்த வழக்கு நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மரண தண்டனையில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக அவர்கள் 4 பேரும் ஒவ்வொருவராக மறுஆய்வு மனு, சீராய்வு மனு, கருணை மனு ஆகியவற்றை மாறி மாறி தாக்கல் செய்ததால் அவர்களை தூக்கில் போடுவது 3 முறை தள்ளிவைக்கப்பட்டது.
குற்றவாளிகள் 4 பேரின் க...