22-வது ஆண்டு வெற்றி விழா: கார்கில் போர் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அஞ்சலி!
22-வது ஆண்டு வெற்றி விழா: கார்கில் போர் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அஞ்சலி!
1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்தது. இதன் 22-வது வெற்றி விழா இன்று கொண்டாடப்பட்டது.
கார்கில் போர் நினைவுச் சின்னம் கார்கிலில் உள்ள டராஸ்சில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு போரில் உயிர் இழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
கார்கில் போரில் 559 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள். அதை நினைவூட்டும் வகையில் நினைவுச்சின்னத்தில் 559 விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டு இருந்தன.
முதலாவதாக இன்று காலை முப்படை தளபதி பிபின்ராவத் கார்கில் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
அதை தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஸ்ரீநகரில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக டராஸ் சென்றார். அவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் கார்கில் வெற்றிவிழா அங்கு நடத்தப்படுகிற...
