இயக்குனர் செல்வமணியின் “இருக்கு ஆனா இல்ல” I ஏமாறும் திரையுலகம் I கதையான நிஜம்
இயக்குனர் செல்வமணியின் பொட்டல் காட்டுச்சாதனை ! ?
“இருக்கு ஆனா இல்ல”
இந்த வீடியோ பதிவு யாரையும் குறை சொல்வதற்காக எடுக்கப்படவில்லை. ஆனால், பல ஆண்டுகளாக பல ஆயிரம் தொழிலாளர்கள் பெயரில் தொடர்ந்து மாய நம்பிக்கை பிம்பத்தை ஏற்படுத்தி வரும் செயலை சுட்டிக்காட்டவே எடுக்கப்பட்டுள்ளது.
அதோடு, ஒரே நிர்வாகம் பல ஆண்டுகளாக பதவியில் நீடித்தால் தவறுகள் கூட சரியாகத்தான் அவர்கள் கண்களுக்கு தெரியும்.
25 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட பெப்சி தொழிலாளர்களுக்கு வீடு கட்டித்தருவதாக வாக்குறுதி அளித்து அரசிடமும், நடிகர்களிடமும், தனியாரிடமும் பல கோடிகளை வசூலித்து பல ஆண்டுகள் ஆகியும் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படாமல் அரசு கொடுத்த போது எப்படி பொட்டல் காடாக இருக்கிறதோ இப்போதும் அதே பொட்டல் காடாக இருக்கும் நிலத்தில் மண் அடித்தோம், சமப்படுத்தினோம், மரங்களை வெட்டினோம் என பல கோடிகளை கணக்காக காண்...