நீலிக்கண்ணீர் வடிக்கும் மோடி அரசு – திருமாவளவன் எம்.பி கண்டனம்!
நீலிக்கண்ணீர் வடிக்கும் மோடி அரசு - திருமாவளவன் எம்.பி கண்டனம்!
தகவல் தொழில்நுட்ப விதிகள் என்ற பெயரில் சமூக ஊடக நிறுவனங்களை மிரட்டி அவற்றைப் பயன்படுத்தும் குடிமக்களின் அந்தரங்கத் தரவுகளை கண்காணிக்க முயற்சிக்கும் பாஜக அரசின் சர்வாதிகாரப் போக்குக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனத்தை தெரிவித்துள்ளது
இது தொடர்பாக திருமாவளவன் எம்.பி வெளியிட்ட அறிக்கையில்,
பாஜக அரசு வகுத்துள்ள தகவல் தொழில்நுட்ப விதிகள் -2021, சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் தரவுகளை அளிக்குமாறு அரசாங்கம் கோரினால் அவற்றைத் தொடர்புடைய நிறுவனங்கள் உடனடியாக வழங்க வேண்டுமென்றும்; அரசாங்கம் சுட்டிக்காட்டுகிற பதிவுகளை 24 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டுமென்றும்; இவற்றைச் செய்வதற்கு பொறுப்புள்ள அலுவலர்களை நியமிக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது.
இதற்கு ஒப்புக் கொள்ளாத சமூக ஊடக நிறுவனங்களை இந்த...
